districts

img

தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகள் குறித்து நகராட்சித் தலைவரிடம் மனு

இராமநாதபுரம், ஆக.9-  இராமேஸ்வரத்தில் தூய்மைப் பணியை தனியார் நிறுவனம் மூலம் நக ராட்சி நிர்வாகம் செய்து வருகிறது. அதில், வேலை செய்யும் ஊழியர்கள் காலை 6 மணிக்கு வந்து பிற்பகல் 2 மணி வரை தூய்மை பணியில் ஈடுபடுவார்கள். அந்த  ஷிப்ட் முறையை அந்த நிறுவனம் திடீரென  மாற்றி காலை 6 மணியிலிருந்து 12 மணி  வரையும் பிற்பகல் 3 மணி முதல் மாலை 6 மணி வரையும் வேலை செய்ய வலியுறுத்தி யது. இதனால், தூய்மைப் பணியாளர்கள் கடும் சிரமத்தை சந்தித்து வந்தார்கள். மேலும் வார விடுமுறை தராத நிலை இருந்தது. அத்துடன் தூய்மைப் பணியை கண்காணிக்கும் மேற்பார்வையாளர்கள், பெண் ஊழியர்களை சாதி ரீதியான பார்வையோடு இழிவாகவும் அவமரி யாதையாகவும் நடத்துவதை கண்டித்தும் இந்த பிரச்சனைகளை சரி செய்ய வலி யுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் நகராட்சித் தலைவர் நாசர் கானை  சந்தித்து மனு கொடுக்கப்பட்டது. உடனடியாக சம்பந்தப்பட்ட நிறு வனத்தின் அதிகாரிகளை தொடர்பு கொண்டு நகராட்சித் தலைவர் பேசினார்.  பிறகு நகராட்சித் தலைவர் நாசர் கான்,  நகராட்சித் துணைத் தலைவர் தட்சணா மூர்த்தி, முன்னாள் நகர்மன்ற தலைவர் ஏ. அர்ஜூனன் ஆகியோர் பங்கேற்ற பேச்சு வார்த்தை நடைபெற்றது. இதில் பழைய சிப்ட் முறையை அமல்படுத்துவது என்று  உறுதியளிக்கப்பட்டது. தூய்மைப் பணி  ஊழியர்களுடன் கலந்து பேசி வார விடு முறையை வழங்குவது, பெண் ஊழியர்களி டம் மரியாதை குறைவாக நடந்து கொண் டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று  உறுதி கொடுக்கப்பட்டது. இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் தாலுகாக்குழு உறுப்பினர்கள் ஏ. அசோக், வழக்கறிஞர் டி.மாரிமுத்து, இ.ஜஸ்டின், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் மாவட்டச் செயலாளர் நா.கலையரசன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.