பெட்ரோல் - டீசல் மற்றும் சமையல் எரிவாயு, மருந்து விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவித்தும் மானிய விலையில் பெட்ரோல் வழங்கக்கோரியும் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் மதுரை தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் (பொறுப்பு) டி.குமரவேல் எம்.சி., தலைமை வகித்தார். சிறுபான்மை மக்கள் நலக்குழு மாவட்டச் செயலாளர் கே.அலாவுதீன் பேசினார். மாவட்டகுழு உறுப்பினர் ராஜேந்திரன், காதுகேளாத வாய்பேசாதோர் அமைப்பின் தலைவர் ஆ.பாலமுருகன் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.