districts

img

ராகேஷ் திகாயத் மீதான கருப்புமை வீச்சுக்கு கண்டனம்

திண்டுக்கல், ஜூன் 3- வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தை வழிநடத்திய விவசாயிகள் சங்க தலை வர்களில் ஒருவரான ராகேஷ் திகாயத் மீது  பெங்களு ருவில் கருப்பு மை வீசியதைக் கண்டித்து திண்டுக்கல் மாவட்ட ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட ஒருங்கிணைப்பா ளர் என்.பெருமாள் தலைமை வகித்தார். திண்டுக்கல் மாவட்ட விவசாயிகள் சங்க தலைவர் நிக்கோலஸ், அகில இந்திய விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் பாண்டி, குடகனாறு பாசன விவசாயிகள் சங்கத்தின் சார்பாக ராமசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.  மதுரையில் ஐக்கிய விவசாயிகள் சங்கத்தின் மதுரை மாவட்டக் குழு  சார்பில் திருமங்கலத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு மாவட்ட ஒருகிணைப்பாளர் ஜி.சந்தானம் தலைமை வகித்தார். தமிழ்நாடு விவசாயிகள் மாவட்டத் தலைவர் எஸ்.பி.இளங்கோவன் .சிபிஐ ஒ.சுப்பு காளை,  மி.தா.பாண்டியன், ஆர்.சி.சுப்பிரமணியன், மதிவாணன் ஆகியோர் பேசினர். சிவகங்கையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் மாவட்ட செய லாளர் ஆறுமுகம், சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் குணசேகரன் ஆகியோர் தலைமை வகித்தனர். மாவட்டத் தலைவர் ஜெயராமன், மாவட்ட பொருளாளர் வீரபாண்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.