districts

img

மதுரையில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆர்ப்பாட்டம்

மதுரை, ஆக.16-  திருநெல்வேலி மாவட்டம் நாங்கு நேரி பகுதியில் தலித் மாணவன் சின்னத்துரை மற்றும் அவரது தங்கை மீது கொலை வெறி தாக்கு தல் நடத்திய சிறுவர்களுக்கு சாதி  உணர்வை தூண்டியவர்கள் மீது  கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் தலித் மற்றும் பழங்குடி யினர் மீது அதிகரிக்கும் சாதிய வன்  கொடுமைகளுக்கு முடிவு கட்ட வேண்டும். எஸ்சி / எஸ்டி மாவட்ட  விழிக்கண் குழுவின் செயல்பாட்டை தீவிர படுத்த வேண்டும் என்று வலி யுறுத்தி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு  முன்னணி மதுரை மாநகர் - புற நகர் குழுக்கள்  சார்பில் மாவட்ட  ஆட்சியர் அலுவலகம் அருகில் புத னன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநகர் மாவட்ட தலைவர் ஆர்.  சசிகலா தலைமை வகித்தார். மாநி லத் தலைவர் தா. செல்லக்கண்ணு  மாநகர் மாவட்ட செயலாளர் ம.  பாலசுப்பிரமணியன், புறநகர் மாவட்ட தலைவர் செ. ஆஞ்சி, செய லாளர் செ. முத்துராணி, வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் டி. செல்வா, மாதர் சங்க மாவட்டச் செய லாளர்  மாமன்ற உறுப்பினர் வை. ஜென்னியம்மாள்,  விவசாய தொழி லாளர் சங்க மாவட்டச் செயலாளர் வேல் பாண்டி உள்ளிட்ட பலர் கண்டன உரையாற்றினர்.  மாநகர்  மாவட்ட பொருளாளர் ஜா. நர சிம்மன், மாணவர் சங்க நிர்வாகி கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட னர்.