districts

img

தோழர் கே.பழனிச்சாமி படத்திறப்பு

மதுரை, ஏப்.30-  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியின் மதுரை புறநகர் மாவட்டம் அலங்காநல்லூர் முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினரும் அகில இந்  திய விவசாயத் தொழிலாளர்  கள் சங்கத்தின் மாவட்டக் குழு உறுப்பினருமான மறைந்த  மூத்த தோழர் சேந்தமங்கலம் கிராமத்தை சேர்ந்த கே. பழனிச்சாமி அவர்களின் படத்திறப்பு நிகழ்ச்சி நடை பெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு கட்சி யின் அலங்காநல்லூர் ஒன்றி யச் செயலாளர் எஸ். ஆண்  டிச்சாமி தலைமை வகித்தார். மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.கே.பொன்னுததாய்,  தோழர் கே.பழனிச்சாமி அவர்களின் படத்தை திறந்து வைத்து உரையாற்றினார். மாவட்டச் செயற்குழு உறுப் பினர் வி.உமாமகேஸ்வரன், ஒன்றியக் குழு உறுப்பினர் கள் எம்.சேதுராமன், கே.தவ மணி, என்.ஸ்டாலின் குமார் ஆகியோர் புகழஞ்சலி செலுத்தினர்.  நிகழ்ச்சியில் பழனிச்சாமியின்  மனைவி பெருமாயி, மகள் கயல்விழி,  உறவினர்கள் பஞ்சு மற்றும்  கண்ணன் உட்பட குடும்பத்தி னர் கலந்து கொண்டனர். இதில் கட்சியின் சார்பில்  நடைபெற்ற நடைபயணத் தில்  பங்கேற்றவர்களுக்கு பாராட்டு நிகழ்ச்சியும்  நடை பெற்றது.