districts

img

தோழர் அன்னத்தாய் காலமானார்

மதுரை, அக்.12-  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மதுரை மாநகர் மாவட்டச் செய லாளர் மா.கணேசனின் சகோதரியும் பைக்காரா முத்துராமலிங்கபுரம் மாதர் சங்க கிளையின் மூத்த தோழ ருமான அன்னத்தாய் (75) புதனன்று நள்ளிரவு காலமானார். பைக்காரா பகுதியில் உள்ள அடிப்படை பிரச்சனை களை தீர்க்க தொடர்ந்து தோழர்களுடன் இருந்து குரல்  கொடுத்தவர். 30 ஆண்டுகளாக கட்சியின் பணிகளில் பெண்களை திரட்டுவதில். தேர்தல் காலங்களில் கட்சிக்கு  வாக்கு சேகரிப்பதிலும் தன்னை ஈடுபடுத்தி கொண்டவர். வயதான காலத்திலும் வாகன ஏற்பாடு செய்தால் கட்சி நிகழ்வுகளுக்கு ஆர்வமுடன் பங்கேற்று வந்தார்.  இந்நிலையில், உடல் நலக்குறைவால் அரசு ராஜாஜி  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், புதனன்று இரவு தோழர் அன்னத்தாய் காலமானார். தொடர்ந்து அவரது உடல் அஞ்சலிக்காக சொந்த ஊரான  நாகமலை புதுக்கோட்டை அருகில் உள்ள மேலக்குயில் குடி கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.  அன்னாரது மறைவு செய்தி அறிந்து கட்சியின் மாநிலச்  செயற்குழு உறுப்பினரும் மதுரை நாடாளுமன்ற உறுப்பி னருமான சு.வெங்கடேசன், மாநிலக் குழு உறுப்பினர் இரா.விஜயராஜன், புறநகர் மாவட்டச் செயலாளர் கே. ராஜேந்திரன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் மாநகராட்சி  துணை மேயர் தி.நாகராஜன், மாமன்ற உறுப்பினர் டி.குமர வேல் உட்பட மாநகர், புறநகர் மாவட்டச் செயற்குழு, மாவட்டக் குழு உறுப்பினர்கள், வெகுஜன அமைப்பு நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் அஞ்சலி செலுத்தினர்.