நாகர்கோவில், டிச.19- கடந்த 50 ஆண்டுகளாக இராஜாக்கமங்கலம் வட்டாரப் பகுதிகளில் தீக்கதிர் பத்திரி கையின் முகவராக இருந்து செயல்பட்ட இராஜாக்கமங்க லம் மேற்குதெரு பகுதியை சேர்ந்த ஏ.நீலகண்டபிள்ளை (88) சனியன்று காலமானார். அவரது உடலுக்கு சிபிஎம் சார்பில் மலரஞ்சலி செலுத்தப் பட்டது. இந்நிகழ்வில் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் என்.எஸ்.கண்ணன், ஒன்றிய செயலாளர் எஸ்.ற்றி. ராஜகுமார், கிளைச்செயலாளர் சொர்ணம், சுப்பையன் பிள்ளை உட்பட பலர் அஞ்சலி செலுத்தினர்.