மதுரை, டிச.3- அகில இந்திய இன்சூ ரன்ஸ் ஊழியர் சங்கத்தின் மதுரை கோட்ட முன்னாள் தலைவர் ஜி.மீனாட்சிசுந்தரம் அவர்களின் பணிநிறைவு பாராட்டுவிழா டிசம்பர் 3 சனிக்கிழமையன்று மதுரை காந்தி அருங்காட்சியகம் அருகில் உள்ள பூங்கா முரு கன் கோவில் மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கோட் டத் தலைவர் என். சுரேஷ் குமார் தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் என். பி. ரமேஷ்கண்ணன் வரவேற் றுப் பேசினார். பிஎஸ்என்எல் ஊழியர் சங்க பொதுச் செய லாளர் பி. ரிச்சர்டு, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன் னணி மாவட்டத் தலைவர் ஆர்.சசிகலா, வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் டி. செல்வா, ஜனநாயக மாதர் சங்க மாவட்டச் செயலாளர் வை. ஜென்னியம்மாள் எம்.சி., மாணவர் சங்க மாவட்டத் தலைவர் டேவிட், தமிழக மக் கள் ஒன்றுமை மேடை என்.ஜெயசந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இன் சூரன்ஸ் ஊழியர் சங்க அகில இந்திய தலைவர்களில் ஒரு வரான அமானுல்லாகான், இணைச் செயலாளர் எம். கிரிஜா, தென்மண்டல முன் னாள் பொதுச் செயலாளர் க. சுவாமிநாதன், இணைச் செய லாளர் ஆர்.கே.கோபிநாத், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் மா. கணேசன், மாநிலக்குழு உறுப் பினர் இரா. விஜயராஜன், காப்பீட்டுக்கழக ஊழியர் சங்க நெல்லை தலைவர் சி. முத்துக்குமாரசுவாமி, தஞ்சை பொதுச் செயலாளர் வி. சேதுராமன், கேரள மாநிலம் கோட்டயம் தலைவர் சுரேஷ், இன்சூரன்ஸ் பென்சனர்ஸ் சங்க துணைத் தலைவர் சி. சந்திரசேகரன், பொது இன்சூ ரன்ஸ் ஊழியர் சங்க தென் மண்டல இணைச் செயலா ளர் எஸ். பாலசுப்பிரமணி யன், முதல் நிலை அதிகாரி கள் சங்க தலைவர் பி. சீனி வாசன், தேசிய களப் பணியா ளர் கூட்டமைப்பு துணைத் தலைவர் எம். அருண்குமார், லியாபி முகவர் சங்கம் எல். முத்துமாணிக்கம் லிக்காய் முகவர்கள் சங்க பொதுச் செயலாளர் கே.மாரி, சிஐ டியு மாவட்ட தலைவர் இரா.தெய்வராஜ் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். ஜி. மீனாட்சி சுந்தரம் ஏற்புரை யாற்றினார். மகளிர் துணைக் குழு அமைப்பின் பொருளா ளர் டி.சித்ரா நன்றி கூறி னார்.