மதுரை, மார்ச் 24- மதுரை பெரு நகர் மின் திட்டத்தில் தமிழ்நாடு மின் ஊழி யர் மத்திய அமைப்பு சிஐடியு நிர்வாகக் குழு உறுப்பினரும் ஒப்பந்த ஊழியருமான எஸ்.காந்தி மின் விபத்தில் பலியானார். இவர் மின் வாரியத்தில் பனிரெண்டு ஆண்டுகளுக் கும் மேலாக ஒப்பந்த பணியாளராகவும் பணியாற்றியவர். சிஐடியு மின் ஊழியர் சங்க ஒப்பந்த தொழிலாளர்களுக்கான பிரதிநிதியாக செயல்பட்டவர். மதுரை பெருநகர் மின் திட்டம் தெற்குக் கோட்டத் தில் டவுன்ஹால் மின் பிரிவில் செவ்வா யன்று மின் பணியாளர்களுடன் சென்று மின்கம்பி அறுந்து கிடந்த பழுதை சரி செய்ய சென்றபோது விபத்து ஏற்பட்டு மின் கம்பத்தின் மேலே மரணித்தார். பின்பு சக ஊழியர்கள் மின்சாரத்தை நிறுத்தி முதலுதவிக்கு பின் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற னர். ஆனால் முன்பே இறந்துவிட்டதாக மருத்துவ குழுவினர் கூறியுள்ளனர். இதனை அடுத்து கவனக்குறைவாக செயல்பட்ட அந்தப் பிரிவு உதவி மின் பொறியாளர், முகவர், மின்பாதை ஆய் வாளர் மற்றும் மின்கம்பியாளர் மீது எஸ். எஸ். காலனி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அங்கிருந்த தொழிற் சங்க நிர்வாகிகள் சிலர் கூறுகையில், முறையாக வருகை பதிவேடு மற்றும் பணி செய்யும் நேரம் போன்றவைகளை அதிகாரிகள் செயல்படுத்துவதில்லை. இதனால் அப்பாவி தொழிலாளர்கள் இது போன்ற நேரங்களில் மரணிக்க நேரு கிறது. இதை தமிழக அரசு முறைப்படுத்த வேண்டும். இல்லையென்றால் இது போல் அப்பாவி தொழிலாளர்கள் மர ணிக்கும் அபாயம் தொடர்ந்து ஏற்பட்டு ஏற்பட்டுக்கொண்டே இருக்கும். உயிரி ழந்த தொழிலாளி காந்தியின் குடும்பத் திற்கு இழப்பீடு மற்றும் அவர்கள் குடும் பத்தை சேர்ந்த உறுப்பினர்களுக்கு அரசு வேலை வழங்கிட வேண்டும் என்று தமிழ் நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு கோரிக்கை வைக்கின்றது என்று தெரி வித்தனர்.