districts

கானை நோய் தாக்கி இறந்த மாடுகளுக்கு இழப்பீடு வழங்குக!

கடமலைக்குண்டு, டிச.14- தேனி மாவட்டம் கடமலை-மயிலை ஒன்றிய கிராமங்களில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக மாடு, ஆடு உள்ளிட்ட கால்நடைகள் வளர்ப்பில் ஏராளமா னோர் ஈடுபட்டு வருகின்றனர். கடமலைக் குண்டு, மயிலாடும்பாறை, கோம்பைத் தொழு,  தும்மக்குண்டு உள்ளிட்ட கிராமங்களில் அரசு கால்நடை மருத்துவ மனைகள் செயல்பட்டு வருகிறது.  ஒவ்வொரு வருடமும் குறிப்பிட்ட மாதங்களுக்கு இடையே கால்நடை பராமரிப்பு துறை மூலம் மாடுகளுக்கு இலவசமாக கானை நோய் தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தது.  கடந்த 1 வருடமாக கடமலை-மயிலை ஒன்றியத்தில் மாடுகளுக்கு கானை நோய் தடுப்பூசி செலுத்தப்படவில்லை. இந்த நிலையில் வருசநாடு, தும்மக்குண்டு, வாலிப்பாறை உள்ளிட்ட பகுதியில் கடந்த சில நாட்களாக மாடுகளுக்கு கானை நோய் வேகமாக பரவி வருகிறது. இந்த நோயால் பாதிக்கப்படும் மாடுக ளுக்கு வாய்களில் கொப்பளங்கள் ஏற்படுவதால் தொடர்ந்து 3, 4 நாட்கள் வரை இறை உண்ணாமல் இறந்து விடுகிறது. கானை நோய் தாக்கப்பட்ட மாடுகளுக்கு மருந்து, மாத்திரைகள் கொடுத்தாலும் அது எந்தவிதத்திலும் பலனும் அளிப்பதில்லை என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.  தற்போது வருசநாடு பகுதியில் பரவி வரும் கானை நோய் மற்ற பகுதி களுக்கு பரவும் முன்பு சம்பந்தப்பட்ட கால்நடை பராமரிப்பு துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கடமலை-மயிலை ஒன்றியத்தில் அனைத்து கிரா மங்களிலும் முகாம்கள் நடத்தி மாடுக ளுக்கு கானை நோய் தடுப்பூசி செலுத்த வேண்டும். மேலும் கானை நோய் தாக்கி இறந்து போன மாடுகளுக்கு அரசு சார்பில் நிவாரணம் வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள் ளனர்.