தேனி, ஏப்.22- போடி வட்டம் சூலப்புரம் கிராமத் தில் 57 குடும்பங்களுக்கு 18 ஆண்டுக ளாக பட்டா வழங்காமல் காலம் தாழ்த்திய நிலையில் வெள்ளிக் கிழமை வட்டாட்சியர் அலுவலகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய காத்திருப்பு போராட்டத்தின் விளைவாக மே மாதம் 20 ஆம் தேதி பட்டா வழங்குவதாக வட்டாட்சியர் உறுதியளித்தார். போடி வட்டம், சிலமலை வருவாய் கிராமம், சூலப்புரம் கிராமத்தில் 57 குடும்பங்கள் 20 ஆண்டுகளுக்கு மேல் குதுவல் நிலத்தில் குடியிருந்து வரு கிறார்கள். கடந்த 18 ஆண்டுகளாக குதுவல் நிலத்தை நத்தமாக வகை மாற்றம் செய்து வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என அந்த குடி யிருப்பு மக்கள் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி தலைமையில் பல கட்ட மாக போராட்டம் நடத்தி வந்தனர். நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில் அந்த வழக்கு திரும்பப் பெறப்பட்டது.
எனினும் பல்வேறு கார ணங்களை சொல்லி பட்டா வழங்கா மல் காலம் தாழ்த்தி வந்தனர். காத்திருப்பு போராட்டம் இந்நிலையில் 57 குடும்பங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என வலி யுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் காத்திருப்புப் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது .அதன்படி சூலப்புரம் கிராமத்தை சேர்ந்த 100 க்கும் மேற்பட்டோர் அடுப்பு, பாத்திரங்களுடன் போடி வட்டாட்சியர் அலுவலகத்தில் காத்தி ருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.போராட்டத்திற்கு கட்சியின் கிளை நிர்வாகிகள் ஜெ.பவுன் பாண்டி, ஏ.செல்லப்பாண்டி ,வி.அம்சமணி, வி.முருகேசன், இ.ஏத்திலாவுலு ஆகி யோர் தலைமை வகித்தனர்.போராட்டத்தை ஆதரித்து கட்சியின் தேனி மாவட்ட செயலாளர் ஏ.வி. அண்ணாமலை பேசினார். கோரிக் கைகளை விளக்கி கட்சியின் மூத்த தலைவர் கே.ராஜப்பன் உரையாற்றி னார். நிகழ்ச்சியில் மூத்த தலைவர் எல்.ஆர்.சங்கரசுப்பு, கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி. முனீஸ்வரன், தாலுகா செயலாளர் எஸ்.செல்வம், மாவட்டக்குழு உறுப்பி னர் கே.செல்வராஜ் ,தாலுகாக்குழு உறுப்பினர்கள் தங்கபாண்டி, காமராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பின்னர் போடி வட்டாட்சியர் செந்தில் முருகன், மார்க்சிஸ்ட் கட்சி தலைவர்களுடன் பேச்சு வார்த்தை யில் ஈடுபட்டனர். அப்போது பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், மே 20 ஆம் தேதி அனைவருக்கும் பட்டா வழங்கப்படும் என வும் உறுதியளித்தார். பின்னர் அவர் போராட்டத்தில் கலந்து கொண்ட மக்களிடம் நேரில் வந்து பேசினார். அதனைத் தொடர்ந்து போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.