districts

img

தூய மரியன்னை மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவருக்கு பாராட்டு விழா

மதுரை, பிப்.21- மதுரை செயின்ட் மேரீஸ் மேல்நிலைப் பள்ளியில் திங்களன்று பள்ளி தாளாளர் ஸ்டீபன் லூர்து பிரகாசம் சே.ச. தலை மையில், தலைமையாசிரியர் அ.சேவியர் ராஜ் சே.ச. முன்னிலையில், தூய மரி யன்னை மேல்நிலைப்பள்ளியின் முன்னாள் மாணவர் டேனியல் விஜயராஜுக்கு, லண்ட னில் மருத்துவ சேவைக்கான மிக உயர்ந்த “ஃப்ளாரன்ஸ் நைட்டிங்கேல்” விருது பெற்ற மைக்காக பாராட்டு விழா நடைபெற்றது.  விழாவில் ஏற்புரையாற்றிய மரு.டேனி யல் விஜயராஜ் பள்ளியில் படித்த நினை வலைகளையும், அனுபவங்களையும் மாணவர்களுடன் பகிர்ந்து கொண்டார். கடின உழைப்புடனும், ஒழுக்கத்துடனும் வாழ்வதோடு, மக்களுக்கு சேவை செய் யும் மனப்பான்மையையும், அர்ப்பண உணர்வையும் வளர்த்துக் கொண்டால், நல்ல மனிதர்களாக வாழ முடியும் என்று மாணவர்கள் மத்தியில் பேசினார். நிகழ்ச்சி யில் இன்னாசி சே.ச., முன்னாள் ஆசிரி யர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.