விருதுநகர், ஜூன் 12- இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் திருநெல்வேலி மாவட்ட பொருளாளராக செயலாற்றி வந்த வர் எம்.அசோக். இவர் சாதி ஆதிக்க வெறியர்களால் 2019 ஜூன் 12 அன்று வெட்டிப் படுகொலை செய்யப் பட்டார். அவரது மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் இந்திய மாணவர் சங்கம் சார்பில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடை பெற்றது. விருதுநகர் கச்சேரி சாலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு வாலி பர் சங்க மாவட்டத் தலைவர் கருப்ப சாமி தலைமை தாங்கினார். மாண வர் சங்க மாவட்டச் செயலாளர் கே. சமயன் துவக்கவுரையாற்றினார். வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் எம்.ஜெயபாரத் நிறைவுரையாற்றி னார். மேலும் இதில் வாலிபர் சங்க மாவட்ட நிர்வாகிகள் கணேசன், செந்தமிழ்செல்வன், மாணவர் சங் கத்தின் ஹரிராஜ், மாலேஸ்வரி உட் பட பலர் பங்கேற்றனர்.