மதுரை,ஏப்.8- திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி சார்பில் மதுரை மக்களவைத் தொகுதி யில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பா ளர் சு.வெங்கடேசன் ஏப்ரல் 7 ஞாயிறன்று மேற்குத்தொகுதி யில் மகளிரணியினர், இளை ஞர்கள் சூழ வீதிகள் தோறும் சென்று வாக்குச் சேகரிப்பு பிரச்சாரம் மேற்கொண்டார். பட்டாசுகள் வெடித்து, தப் பாட்டம்,டிரம்ஸ் இசையுடன் வண்ணங்கள் மற்றும் பூக்களை தூவி வேட்பாளர் சு.வெங்கடே சனை வரவேற்றனர்.
வழிநெடு கிலும் வீடுகள் தோறும் வேட்பா ளருக்கு மாலையணிவித்து உற்சாகமான வரவேற்பை அளித்தனர். ஒவ்வொரு வர வேற்பு மையத்திலும் ஏராளமான பெண்கள் உட்பட பெருந்திரளா னோர் பங்கேற்றனர்.
திமுக,சிபிஎம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மக்கள் நீதி மய்யம்,ஆதித்தமிழர் கட்சி மற்றும் இந்தியா கூட்டணிக்கட்சி களின் சார்பில் வரவேற்பு அளிக் கப்பட்டது. இந்த பிரச்சாரங்களில் வேட்பாளர் சு.வெங்கடேசன் பேசியதாவது: வேறெந்த மாநிலத்திலும் இல்லாத, மகளிருக்கு மாதந் தோறும் ஆயிரம் ரூபாய் வழங் கும் திட்டத்தையும் வேலை க்குச் செல்லும் பெண்களின் சுமையை குறைக்க, பள்ளி செல்கின்ற அவர்களின் குழந் தைகளுக்கு பள்ளியிலேயே காலை உணவு வழங்கும் திட்டத்தையும் கொண்டு வந்தவர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். மதுரையில் இரண் டாவது தொழிற்பேட்டையை அமைப்பதற்கான அரசா ணையை தமிழக அரசு வெளி யிட்டுள்ளது. 40 ஆண்டுகளுக் குப் பிறகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆட்சியில் இந்த தொழிற்பேட்டை கொண்டுவரப் பட்டுள்ளது.10 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்புகளை கொடுக் கின்ற டைட்டல் பார்க் அமைக்கப் படுகிறது.
தென்னிந்தியாவி லேயே மிகப்பெரிய நூலகமான கலைஞர் நூற்றாண்டு நூலகம் மதுரையில் அமைக்கப் பட்டுள்ளது. கல்விக்கடன்களை வழங்கு வதில் இந்தியாவிலேயே எந்த எம்.பி.யும் செய்யாத, ஆளுங் கட்சியின் எம்.பி.மற்றும் ஒன்றிய அமைச்சர்கள் கூட செய்யாத வற்றை மதுரைக்கு செய்துள் ளோம். 500 கோடி ரூபாய் அள விற்கு கல்விக்கடன்கள் பெற்றுத் தரப்பட்டுள்ளது. இது ஒரு மாபெரும் சாதனை ஆகும். 500 கோடி ரூபாய் மதிப்பிலான அரசரடி ரயில்வே மைதான நிலத்தை இந்த அணியினரும் மக்களும் போராடி மீட்டுள் ளோம்.
கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் செய்ததை விட, திமுக அரசின் மூன்று ஆண்டுகால ஆட்சியில் மக்க ளுக்கு செய்த நலத் திட்டங்கள் அதிகம். செய்ததை கம்பீரமாகச் சொல்லி மக்களிடம் வாக்கு கேட்கிறோம். இந்தியாவை காக்க, அரிவாள் சுத்தியல் நட் சத்திரம் சின்னத்தில் வாக்களி யுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.