அருப்புக்கோட்டை, மே 21- அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் மூலம் நடை பெற்று வரும் பணிகளை மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் நேரில் ஆய்வு செய்தார். அருப்புக்கோட்டை ஒன்றியம், பெரியவள்ளிகுளம் ஊராட்சியில் ரூ.60 ஆயிரம் மதிப்பில் சமையலறை புனரமைப்பு பணி, பெரியவள்ளிகுளத்தில் எம்.எல்.ஏ தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.3 இலட்சம் மதிப்பி லான குளியலறை கட்டடம், குல்லூர்சந்தை இலங்கை தமி ழர் மறுவாழ்வு மையத்தில் ரூ.351.30 லட்சம் மதிப்பில் வீடு கள் கட்டும் பணி, ரூ.20 லட்சத்தில் நடைபெறும் வரத்து கால்வாய் பணி, அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.76 ஆயிரம் மதிப்பில் நடைபெறும் நூலக பராமரிப்பு பணி, செட்டிபட்டியில் ரூ.8.08 லட்சம் மதிப்பில் அமைக்கப் பட்டுள்ள கதிர் அடிக்கும் களம், வடக்கு ஊரணியில் ரூ.12.50 இலட்சம் மதிப்பில் நடைபெற்ற பணிகள், கோபால புரத்தில் ரூ.12.98 லட்சத்தில் புதிய அங்கன்வாடி மையக் கட்டிட பணி, ரூ.9 இலட்சம் மதிப்பில் நாடக மேடை கட்டும் பணி ஆகியவற்றை நேரில் ஆய்வு செய்தார். இந்நிகழ்வில், திட்ட இயக்குநர் தண்டபானி, செயற் பொறியாளர் இந்துமதி, வட்டாட்சியர் அறிவழகன், வட்டார வளர்ச்சி அலுவர்கள் சூரியகுமாரி (கி.ஊ.), காஜா மைதீன் பந்தே நவாஸ் உட்பட பலர் இருந்தனர்.