இராமநாதபுரம், ஏப்.22- இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட ரங்கில் ஏப்ரல் 21 அன்று விவ சாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலை வர் ஜானி டாம் வர்கீஸ் தலை மையில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் வட்டார வாரியாக விவசாயிகளிடம் கோரிக்கை கள் மற்றும் குறைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் கேட்ட றிந்தார். பின்னர் மாவட்ட ஆட்சியர் தெரிவிக்கையில், இராமநாத புரம் மாவட்டத்தில் வறட்சி நிவா ரணத்தை பொறுத்தவரை கடந்த நவம்பர் கடைசியில் இருந்து தொடர்ந்து 40 நாட்கள் விவசாயம் மேற்கொள்ள ஏது வாக பயிர்களுக்கு மழை குறிப் பிட்ட அளவு பெய்யாததால் 98, 354 ஹெக்டேர் அளவுக்கு பாதிக்கப்பட்டது. மாவட்ட நிர்வாகத்தின் மூலம் ஒவ்வொரு வட்டார வாரி யாக, கிராம வாரியாக பாதிப்பு தொடர்பாக கணக்கெடுக்கப் பட்டது. தொடர்ந்து, துணை ஆட்சியர் அளவிலான அலு வலர்கள் பாதிக்கப்பட்ட பகுதி களை பார்வையிட்டு அவற்றை கணக்கீடு செய்து உறுதி செய்த தன் அடிப்படையில் கணக்கீடு செய்யப்பட்ட பாதிப்புகள் குறித்து தமிழக அரசுக்கு மாவட்ட நிர்வா கத்தின் மூலம் அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் இராம நாதபுரம் மாவட்டத்திற்கு மொத்த நிவாரணமாக ரூ. 132.7கோடி கோரப்பட்டுள்ளது. இது தொடர்பாக பிப்ரவரி மாதத் தில் அறிக்கை அனுப்பப்பட்டுள் ளது. தொடர்ந்து இது தொடர் பாக மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக வலியுறுத்தப்பட்டு நட வடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டு வருகிறது. எனவே நிவார ணத் தொகை கூடிய விரைவில் கிடைக்க நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டு வருகிறது. எனவே விவசாயிகள் முழு நம்பிக்கை யுடன் இருக்க வேண்டும். இந்த வறட்சி நிவாரணமானது இராம நாதபுரம் மாவட்டத்திற்கு மட்டு மல்லாமல் வறட்சியால் பாதிக் கப்பட்ட மற்ற மாவட்டங்களும் எதிர்பார்த்துக் கொண்டிருக் கின்றன.
குடிநீர் சீராக கிடைக்க ஏற்பாடு
மேலும் தற்போது கோடை காலம் தொடங்கி உள்ளதால் குடிநீர் சீராக கிடைத்திடும் வகை யில் பணிகள் முடுக்கி விடப்பட் டுள்ளன. குடிநீர் சீராக கிடைக் காத பகுதிகளை கண்டறிந்து அந்த பகுதிகளில் குடிநீர் சீராக கிடைத்திடும் வகையில் வாரம் ஒரு முறை திங்கட்கிழமைகளில் அனைத்து நிலை அலுவலர் களுடனான குடிநீர் தொடர்பான ஆய்வு கூட்டம் நடைபெறும். இந்த கூட்டத்தில் குடிநீர் பற்றாக் குறையாக உள்ள பகுதிகள் தொடர்பாக விவாதிக்கப்பட்டு அந்த பகுதிகளில் குடிநீர் ஆதா ரத்தை மேம்படுத்திட நடவ டிக்கைகள் மேற்கொள்ளப் படும். மேலும் வட்டார வாரியாக விவசாயிகளுக்கு தங்கள் பகு திகளில் உள்ள விவசாய நிலங்க ளில் என்ன பயிரிடலாம் என்பது தொடர்பாக கண்டறிந்து சம்பந் தப்பட்ட பகுதிகளில் உள்ள அலுவலர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்துவதன் மூலம் விவ சாயிகள் வாழ்வில் பயன் பெற வழிவகுக்க முடியும் என்று தெரி வித்தார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் இரா. கோவிந்தராஜலு, வேளாண் மைத்துறை இணை இயக்குநர் சரஸ்வதி மற்றும் அரசு அலு வலர்கள், விவசாய பெருமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.