districts

மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்வு கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

மேட்டூர், மே 20- மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து வினாடிக்கு 40 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளதை அடுத்து, வெள்ளக்  கட்டுப்பாட்டு அறையில் நீர்வளத் துறை அதிகாரிகள் கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த ஒரு வார காலமாக காவிரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளிலும் மேட்டூர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால், மேட்டூர்  அணைக்கு வரும் நீரின் அளவு படிப்படியாக அதிகரித்து வந்தது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வெள்ளி யன்று காலை வினாடிக்கு 29,964 கன அடியாகவும், பிற்பகலில்  வினாடிக்கு 40 ஆயிரம் கன அடியாகவும் அதிகரித்தது. அணைக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் அணையிலிருந்து குடிநீர்த் தேவைக்காக வினாடிக்கு 1,500 கன அடி நீர் மட்டுமே திறக்கப்பட்டு வருகிறது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் வெள்ளி யன்று பிற்பகலில் 113.50 அடியாக உயர்ந்துள்ளது. அணை யின் நீர் இருப்பு 83 டி.எம்.சி.யை தாண்டியது.  இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு  பகுதிகளிலும் கேரள மாநிலத்தில் கபினியின் நீர்ப்பிடிப்பு  பகுதிகளிலும் கனமழை பெய்து வருவதால் சனிக்கிழமை யன்று மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 46 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்றும் காவேரி  கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கவும் எச்சரிக்க வேண் டும் என்று ஒன்றிய நீர்வள ஆணையம் தெரிவித்துள்ளது.

;