districts

img

கூடுதல் பணிச்சுமையை எதிர்த்து நகர சுகாதார செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்

மதுரை, ஆக.18-  இந்திர தனுஷ் தடுப்பூசி திட்டத்தின் யு-வின் (U - WIN) செயலி பதிவேற்றம் மற்றும் சான்றிதழ் வழங்கும் பணியை சுகாதார செவிலியர்களிடம் திணிப்பதை உடனடியாக  கைவிட வேண்டும், காலி பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும் என்று  வலியுறுத்தி மதுரை மாநகராட்சி நகர சுகாதார செவிலியர் சங்கம் சார்பில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பெருந்திரள் முறையீடு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் எம். பஞ்சவர்ணம் தலைமை வகித்தார். மாவட்ட துணைத்தலைவர் எஸ்.பர மேஸ்வரி விளக்கி பேசினார். தோழமைச் சங்க  நிர்வாகிகள் ஜெ. மூர்த்தி, இரா.தமிழ், சி.மகுடீஸ்வ ரன், கே.கண்ணன், கே.டி.துரைக்கண்ணன், சி.க. சுஜாதா ஆகியோர் ஆதரித்துப் பேசினர். அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் க.நீதி ராஜா நிறைவுரை யாற்றினார். சங்கத்தின் மாவட்ட பொருளாளர் ஆண்டாளம்மாள் மற்றும் பலர் பங்கேற்றனர்.