விருதுநகர் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் நகர்மன்றத் தலைவர் துணைத் தலைவர் கல்பனா மற்றும் உறுப்பினர்களுக்கு பாராட்டுவிழா, மாநில உரிமை மீட்பு பொதுக்கூட்டம் பொன்விழா மைதானம் அருகில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் இல திருப்பதி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ஆதவன் மணி, நல்லதம்பி மணியம், ராஜபாளையம் நகர தலைவர் சிவகுமார் ஆகியோர் பேசினர்.திராவிடர் கழக தலைவர் கி வீரமணி, திராவிட இயக்க சொற்பொழிவாளர் நாஞ்சில் சம்பத், ஆகியோர் சிறப்புரையாற்றினர்.