திருவில்லிபுத்தூர், ஜூலை 31- திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஆடிப் பூர விழா ஆகஸ்ட் 1 அன்று தேரோட்டத்துடன் நடை பெறுகிறது. இதில் மாநிலம் முழுவதும் இருந்து ஏரா ளமானோர் பங்கேற்பர். ஜூலை 24 ஆம் தேதி துவங்கிய திருவிழா கொடியேற்றம் ஐந்து கருட சேவை, சயன சேவை உள்ளிட்ட பல்வேறு விழாக்கள் நடை பெற்று முக்கிய விழாவாக ஆண்டாள் தேரோட்ட திருவிழா இன்று நடைபெறுவதையொட்டி பக்தர்கள் வசதிக்காக நகராட்சியின் சார்பில் சுகாதார ரீதியாக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சுகாதார ஏற்பாடுகள் குறித்து நகர்மன்ற தலைவர் தங்கம் ரவிக் கண்ணன் கூறுகை யில், திருவிழாவையொட்டி இரண்டு மொபைல் டாய்லட்டுகள் முக்கியமான இடங்களில் நிறுத்தப்பட்டுள்ளன. கோவிலை சுற்றிலும் நான்கு இடங்களில் சிறுநீர் கழிக்கும் மையங் கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆண்டாள் கோவில் நான்கு ரத வீதிகளிலும் பிளிச்சிங் பவுடர்கள் போடப்பட்டுள்ளன. தேரோட்ட திரு விழாவிற்கு வரும் பக்தர்கள் கண்டிப்பாக தங்களை பாதுகாக்கும் பொருட்டு முகக்கவசம் அணிந்து வருதல் வேண்டும். பக்தர்களுக்கு அசவுகரியங்கள் ஏற்பட்டால் அவர்களைப் பாதுகாக்கும் பொருட்டு நகர்ப்புற ஆரம்ப சுகா தார நிலையத்தின் சார்பில் மருத்துவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது. இம்முகாமில் மருத்து வர்கள் ,செவிலியர்கள், ஊழியர்கள் மருந்து மாத்திரைகளுடன் உதவி செய்வதற்கு தயா ராக இருக்கிறார்கள். பக்தர்கள் இதனை பயன் படுத்திக் கொள்ள வேண்டும். நான்கு ரத வீதி களிலும் பக்தர்கள் குடிப்பதற்காக குடிநீர் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. சுகாதாரத்தை பாதுகாக்கும் பொருட்டு நகராட்சி ஆணையாளர் ,நகர்நல அலுவலர், சுகாதார ஆய்வாளர்கள், சுகாதார மேற்பார்வையாளர்கள் மற்றும் துப்பு ரவு பணியாளர்கள் முழுமையான அளவில் பணிகளை மேற்கொள்வார்கள் என்று தெரி வித்தார்.