districts

img

நிறுவன சட்டத்திலிருந்து விலக்கை ரத்து செய்திடுக! சிஐடியு டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்

விருதுநகர், ஜன.7- நிறுவனங்கள் சட்டத்திலிருந்து தமிழ்நாடு வாணிபக் கழகத்திற்கு விதி விலக்கு அளிக்கப்பட்டதை ரத்து செய்ய வேண்டும். 8 மணி நேர வேலை, வார விடுமுறை வழங்க வேண்டும் என வலியுறுத்தி சிஐ டியு-டாஸ்மாக் ஊழியர்கள் சங் கத்தின் சார்பில் விருதுநகரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விருதநகர் மாவட்ட தொழிலா ளர் நலத்துறை அலுவலகம் முன்பு நடைபெற்ற இப்போராட்டத்திற்கு மாவட்டத் தலைவர் சி.வேல்முரு கன் தலைமையேற்றார். துவக்கி வைத்து மாவட்ட செயலாளர் பா. குணசேகரன் பேசினார். முடிவில் சிஐடியு மாவட்ட செயலாளர் பி.என். தேவா கண்டன உரையாற்றினார். மேலும் இதில் மாவட்ட பொருளா ளர் ராஜபாண்டி, சுதாகர் உட்பட பலர் பங்கேற்றனர்.