மதுரை, ஆக.22- மதுரை மாவட்ட டாஸ்மாக் ஊழியர் சங்க (சிஐடியு) 17 ஆவது ஆண்டு பேரவை மாவட்டத் தலைவர் எம். சுந்தர மகாலிங்கம் தலைமையில் செவ்வா யன்று நடைபெற்றது. மாவட்ட துணைச் செயலாளர் பி. சிவ ராஜ் அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். எஸ். வல்லரசன் வரவேற்றுப் பேசினார். சிஐடியு மாநில உதவித்தலைவர் இரா. தெய்வராஜ் துவக்கி வைத்துப்பேசி னார். மாவட்டச் செயலாளர் டி. சிவ குமார் வேலை அறிக்கையும், பொருளா ளர் ஜி. பொன்ராஜ் வரவு - செலவு அறிக்கையும் சமர்ப்பித்தனர். சிஐடியு மாவட்டச் செயலாளர் இரா. லெனின் வாழ்த்திப் பேசினார். மாவட்டத் துணைத் தலைவர் சி. சுப்பையா நிறை வுரையாற்றினார். ஆர் சந்திரன் நன்றி கூறினார். பணி நிரந்தரம் கேட்டு தொடரப்பட்ட வழக்கிற்கு உடனடியாக தீர்ப்பு வழங் கிட உரிய நடவடிக்கையை தமிழக அர சும் தொழிலாளர் துறையும் எடுக்க வேண்டும். டாஸ்மாக்கில் சில்லறை விற்பனை பிரிவு பணியாளர்களுக்கு செயல்படுத்தப்படும் மருத்துவ நிதித் திட்டம் பயன் நிறைந்ததாக இல்லை. பணம் செலவழித்து மருத்துவம் செய்து பின்பு. மருத்துவ நிதி திட்டத்தில் பணம் பெறவதற்கு காலதாமதம் ஆகிறது. எனவே பணியாளர்களுக்கு சலுகைகள் நிறைந்த இஎஸ்ஐ திட்டத்தை அமல் படுத்த வேண்டும்.
கேரளா போன்று இரண்டு கவுண் டர்கள் வைத்து மதுபானக் கடைகளை செயல்படுத்துவதுபோல் தமிழக மது பானக் கடைகளை செயல்படுத்த வேண்டும். டாஸ்மாக் விற்பனை கடைகளில் பணிபுரியும் ஊழியர்களை சமூக விரோ திகள் தாக்கி பணத்தை கொள்ளை யடிப்பது அல்லது கொலை செய்து விட்டு பணத்தை கொள்ளையடித்து செல்வது என்று தொடர் நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது. இதனால் டாஸ்மாக் ஊழியர்கள் பெரும் அச்சத்து டன் பணியாற்றக் கூடிய சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே இது போல் தாக்குதல் நடத்தும் சமூக விரோதிகள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து நடவடிக்கை எடுக்க தமிழக அரசு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் உத்தரவிட வேண்டும் என்பன உள் ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. மாநாட்டில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். மாவட்ட தலைவ ராக எம். சுந்தர மகாலிங்கம், செயலாள ராக டி. சிவகுமார், பொருளாளராக ஜி. பொன்ராஜ் உள்பட 15 பேர் கொண்ட நிர்வாகக் குழு தேர்வு செய்யப்பட்டது.