சிவகங்கை,மார்ச் 25- காரைக்குடி வடக்கு காவல் நிலைய காவல்துறையினரின் செயல்பாட்டைக் கண்டித்து தொழிற் சங்கம் சார்பாக காரைக்குடியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காரைக்குடி ரயில் நிலையம் அருகில் சவாரி ஏற்றிச்சென்ற சிஐடியு தொழிலாளர்களை அங்கி ருந்த மாற்று சங்கத்தினர் தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளனர். ஆட்டோக்களை அடித்து நொறுக்கி விடுவோம் என்று கூறி சிஐடியு தொழிலாளர்களை தாக்கியுள்ள னர். இதுகுறித்து சிஐடியு சங்கத்தி னர் அழகப்பாபுரம் காவல்நிலை யத்தில் அளித்த புகார் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இரண்டு நாட்களுக்கு பிறகு இரு தரப்பினர் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர். இது சட்டத்துக்கு புறம்பானதாகும். சம்பவம் தொடர் பான ஆடியோ பதிவு கொடுத்தும் பாதிக்கப்பட்டவர்கள் மீது வழக்குப் போடுவது எந்தவிதத்திலும் நியாயம் கிடையாது என்று தொழிற் சங்கத்தினர் கண்டித்துள்ளனர். தகராறின்போது சமாதானம்செய்த ஆட்டோ தொழிலாளர் சங்க நகர செயலாளர் வெங்கடேஷ் மீது வடக்கு காவல்துறையினர் பொய் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் வெங்கடேசை வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் போனில் தொடர்புகொண்டு, உன் மீது இரண்டு எப்ஐஆர் உள்ளது.மறுபடியும் எப்ஐஆர் போட்டு விடு வேன் என மிரட்டியுள்ளார். காவல் ஆய்வாளரைக் கண்டித் தும் சட்டத்தை மீறி செயல்படும் காவல்துறை ஆய்வாளர் மீது மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி நடைபெற்ற போராட்டத்திற்கு சிஐடியு மாவட்ட தலைவர் வீரையா தலைமை வகித்தார். சிஐடியு மாநிலச்செயலாளரும் சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான எஸ்.கே. மகேந்திரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஆர்.கே. தண்டியப் பன் ஆகியோர் கண்டன உரை யாற்றினார். சிறுபான்மை நலச்சங்க மாவட்ட செயலாளர் கருப்புச்சாமி, சிஐடியு மாவட்ட செயலாளர் சேது ராமன்,சிஐடியு மாவட்ட துணை தலைவர் சிவக்குமார் ,சிஐடியு ஆட்டோ தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் விஜயகுமார், சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர் அழகர்சாமி, மாவட்ட பொருளாளர் தட்சிணாமூர்த்தி உள்ளிட்டோர் பேசினர்.