districts

img

தொழிலாளர்களை மிரட்டும் கூட்டுறவு சங்க மேலாளரை கண்டித்து சிஐடியு ஆர்ப்பாட்டம்

திருவில்லிபுத்தூர், ஏப்.19- திருவில்லிபுத்தூர் நகரில் Q268 ஆண்டாள் கூட்டு றவு நெசவாளர் சங்கம் செயல்பட்டு வருகிறது இச்சங்கத்தில் 500க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர் இந்த சங்கத்தின் மேலாளராக ராமர் என்ப வர் இருந்து வருகிறார் உறுப்பினர்கள் நெய்து கொண்டுவரும் சேலை களை ஏதாவது ஒரு காரணம் சொல்லி கூலியை முறை யாக கொடுக்காமல் தொட ர்ந்து அலைகழித்து வந்தார். இதுகுறித்து சிஐடியு கைத்தறி நெசவாளர் சங்கத்  தின் தலைவர்களில் ஒருவ ரான அண்ணாதுரை , மேலா ளர் ராமரிடம் முறையிட்டார். அவரிடம் மேலாளர் இனி மேல் இந்த மாதிரி செய்ய  மாட்டேன் என்று உறுதி மொழி அளித்ததோடு,  நெய்த சேலைகளை வாங்கிக் கொண்டு கூலியை கொடுத்து  விடுவதாகவும் கூறினார் ஆனால் அதன் பிறகு நெச வாளர்களிடம் சேலைகளை யும் வாங்காமல் கூலியும் கொடுக்காமல் சிஐடியு தலை வர்களிடம் கூறினால் நான் என்ன பயப்படுவேனா என்று மிரட்டியதோடு உங்களை சங்கத்தில் இருந்து விலக்கி  விடுவேன் என்று மிரட்டி யுள்ளார். நெசவாளர்களுக்கு  நெய்த சேலைக்கு உரிய கூலி கொடுக்காமல் பழி வாங்கும் போக்குடன் நடந்து கொள்ளும் மேலாளர் ராமர்  மீது துறை ரீதியாக நடவ டிக்கை எடுக்க கோரி சிஐ டியு கைத்தறி நெசவாளர் சங்கம் சார்பில் புதனன்று ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத் தலைவர் அண்ணாதுரை தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் ராமர் பேசினர். சிஐடியு சாலை போக்குவரத்து சங்கத்தின் பொதுச்செயலாளர் திரு மலை சிஐடியு மாவட்ட குழு உறுப்பினர் வீரசதானந்தம் பிச்சைக்கனி மரிய டேவிட் உள்பட நெசவாளர்கள் கலந்து கொண்டனர்.