districts

img

சோழவந்தான் அரசு போக்குவரத்து கிளை மேலாளரைக் கண்டித்து சிஐடியு ஆர்ப்பாட்டம்

மதுரை, ஜன.25- பணி நேரத்திற்கு மேல் பணி செய்ய நிர்ப்பந்திப்பதைக் கண் டித்தும், ஒதுக்கப்படாத பணியை கூடுதலான நேரத்தில் வேறு பணி பார்க்கவில்லை என்பதற்காக மத்திய சங்க துணைத் தலைவர்  எம்.சந்திரசேகரனை தற்காலிக பணி நீக்கம் செய்ததை கண்டித் தும், உடனடியாக அவரை பணி யில் அமர்த்த கோரியும், அராஜக போக்கில் ஈடுபடும் சோழவந் தான் கிளை மேலாளரையும்,  நிர்வாகத்தின் அடாவடித் தனத்தை கண்டித்தும், சிஐடியு சோழவந்தான் கிளை சார்பில் கிளைத் தலைவர் கே.ராஜ்குமார் தலைமையில் பணிமனை முன்பு  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. துவக்கி வைத்து சிஐடியு மத்திய சங்க தலைவர் பி.எம்.அழ கர்சாமி பேசினார். மத்திய சங்க பொருளாளர் டி.மாரியப்பன், மத்திய சங்க கிளைப் பொதுச் செயலாளர்கள் எஸ்.செல்வராஜ், எஸ்.மணிமாறன், மத்திய சங்க துணைத் தலைவர் எஸ்.அழ கர்சாமி ஆகியோர் கண்டன உரை யற்றினர்.  நிறைவு செய்து மத்திய சங்க பொதுச் செயலாளர் ஏ.கனக சுந்தர் பேசினார். கிளைச் செயலா ளர் எம்.முனிச்சாமி நன்றி கூறி னார். ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு நிர்வாகிகள், தொழிலாளர்கள் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.