விருதுநகர், மார்ச்.5- ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனடி யாக பேசி முடிக்க வேண்டும். புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். 2003 ஆம் ஆண்டிக்குப் பிறகு பணியில் சேர்ந்த அனைவரை யும் பழைய பென்ஷன் திட்டத்தின் கீழ் இணைக்க வேண்டும். வரவுக்கும் செலவுக்குமான வித்தியா சத் தொகையை அரசே வழங்க வேண்டும். தொழில் உறவை சீர்குலைக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும். ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு பணப்பலன்களை உடனே வழங்க வேண்டும். நீதிமன்ற தீர்ப்புகளை அமலாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு-அரசுப் போக்குவரத்து தொழிலாளர் சங்கம் சார்பில் 24 மணிநேர உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. விருதுநகர் பணிமனை முன்பு நடைபெற்ற இப்போராட்டத்திற்கு மண்டலத் தலைவர் ஏ.சுந்தர் ராஜ் தலைமை தாங்கினார். துவக்கி வைத்து சம்மே ளன உதவித் தலைவர் வி.பிச்சை பேசினார். மண்டல பொதுச் செயலாளர் எம்.வெள்ளைத்துரை விளக்கிப் பேசினார். ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் மாவட்ட செயலாளர் பி.தங்கபழம், தமுஎகச மாவட்ட தலைவர் தேனிவசந்தன், சிஐடியு மாநில உதவித் தலைவர் எம்.மகாலட்சுமி, மாவட்ட துணைத் தலைவர் ஆர்.பாலசுப்பிரமணியன் ஆகி யோர் உட்பட பலர் போராட்டத்தை ஆதரித்து பேசி னர். இதில் ஏராளமான தொழிலாளர்கள் பங்கேற்ற னர். திண்டுக்கல் திண்டுக்கல் அரசு போக்குவரத்து கழகம் 1 ஆவது யூனிட் முன்பாக நடைபெற்ற உண்ணாவிரதப் போராட் டத்திற்கு மண்டல தலைவர் ஜெயக்குமார் தலைமை வகித்தார் .சிஐடியு மாவட்ட தலைவர் பிரபாகரன் துவக்க உரையாற்றினார். பேராசிரியை மோகனா ஆதரித்துப் பேசினார். அரசு போக்குவரத்து தொழி லாளர் சங்க மண்டல நிர்வாகிகள் ஜோசப் அருளா னந்தம், ராமநாதன், மணிகண்டன், மாணிக்கம் மற்றும் அரசு போக்குவரத்து ஊழியர்கள் பங்கேற்ற னர்.சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் கே ஆறுமுகநயினார் சனிக்கிழமையன்று நிறைவுரை யாற்றுகிறார்.