இராமநாதபுரம், மார்ச் 19- மோடி அரசைக் கண்டித்து ஏப்ரல் 5 அன்று நடைபெறவுள்ள தில்லி பேரணியை விளக்கியும், தமிழ்நாடு அரசு உப்பு நிறு வன தொழிலாளர்களுக்கு பணிக்கொடை சட்டத்தின்படி 15 நாள் பணிக்கொடை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி யும் சிஐடியு, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் காவாகுளத்திலிருந்து சிக்கல் வரை நடைபயண பிரச்சாரம் நடைபெற்றது. இந்த பிரச்சாரத்திற்கு அரசு உப்பு நிறுவன தொழிலாளர் சங்க தலைவர் கே. பச்சமால். செயலாளர் வி.குமரவடிவேல் ஆகியோர் தலைமை தாங்கினர். விவசாயி கள் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் எம்.முத்துராமு துவங்கி வைத்தார். சிஐ டியு மாவட்டச் செயலாளர் எம்.சிவாஜி, விவ சாயிகள் சங்க மாவட்ட செயலாளர் வி. மயில்வாகனன், லோடுமேன் சங்க துணைச் செயலாளர் எஸ்.போஸ், உப்பு நிறுவன சங்க நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். காவாகுளம், கீழக்கிடாரம்,, வாலிநோக் கம் விலக்கு, கொத்தங்குளம், ஆய்க்குடி, களநீர் மங்கலம் ஆகிய இடங்களில் பிரச்சா ரம் நடைபெற்று, சிக்கலில் நிறைவடைந்தது.