திருவில்லிபுத்தூர், அக்.27- பஞ்சாலை மற்றும் சிறு, குறு தொழில்களை பாது காத்திட வேண்டும் மின் கட் டண உயர்வை குறைத்திட வேண்டும் என வலியுறுத்தி இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு) சார்பில் நவம்பர் 2 அன்று இராஜ பாளையத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதில் சிஐடியு மாநில தலைவர் அ.சவுந்தரராசன் கலந்து கொள்ள இருக்கிறார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி திருவில்லிபுத்தூ ரில் நடைபெற்ற பிரச்சார இயக்கத்திற்கு மாவட்ட துணை தலைவர் பிச்சைக் கனி தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டத் தலைவர் மகாலட்சுமி விளக்கி பேசி னார். நகர கன்வீனர் வீரச தானந்தம், ஒன்றிய கன் வீனர் சந்தனம், சாலை போக்குவரத்து சங்க மாவட்டச் செயலாளர் திரு மலை, உடல் உழைப்பு சங்க முனியப்பன், சிபிஎம் நகரச் செயலாளர் ஜெயக்குமார், ஒன்றியச் செயலாளர் சசி குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல், இராஜ பாளையம் செட்டியார்பட்டி அரசரடி பகுதியில் நடை பெற்ற பிரச்சார இயக்கத் திற்கு சிஐடியு மாவட்டத் துணைத் தலைவர் ஆர்.எம். மாரியப்பன் தலைமை வகித் தார். மாவட்டத் தலைவர் எம். மகாலட்சுமி விளக்கி பேசி னார். கைத்தறி நெசவாளர் சங்க மாவட்டச் செயலாளர் ராமச்சந்திரன், தையல் தொழிலாளர் சங்க மாவட்ட பொருளாளர் பானுப்பிரியா, மாதர் சங்க நிர்வாகி பொன் னுத்தாய், சிபிஎம் ஒன்றி யச் செயலாளர் சந்தன குமார், மூத்த தலைவர் நீராத்திலிங்கம், வாலிபர் சங்க ஒன்றிய செயலாளர் பரமன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.