districts

img

சிஐடியு- ஆட்டோ சங்க தகவல் பலகை திறப்பு விழா

விருதுநகர், ஜன.1- விருதுநகர் மற்றும் மத்திய சேனை பகுதிகளில் சிஐடியு-ஆட்டோ தொழிலாளர் சங்கத்தின் தகவல் பலகை திறப்பு விழா நடை பெற்றது. சிஐடியு- விருதுநகர் மாவட்ட ஆட்டோ தொழிலாளர் சங்கம் சார்பில் மத்திய சேனை அருகே தகவல் பலகை திறப்பு விழா மற்றும் பள்ளி குழந்தைகளுக்கு  நோட்டு புத்தகங்கள் மற்றும் எழுது பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கிளை தலை வர் மதியழகன் தலைமையேற் றார். கிளை செயலாளர் கார்த்திக் ராஜ், பொருளாளர் முத்து கருப் பன் ஆகியோர் முன்னிலை வகித் தனர். ஆட்டோ சங்க பொதுச் செயலாளர் பி.என். தேவா, தக வல் பலகையை திறந்து வைத்து, மாணவர்களுக்கு நோட்டு புத்த கங்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் ஊராட்சி மன்றத் தலைவர் மெய்யன்,சிபிஎம் வடக்கு ஒன்றிய செயலாளர் ஆர்.முத்து வேல், விவசாய தொழிலாளர் சங்க செயலாளர் கே.இராஜேந்தி ரன், ஜெ.ஜே.சீனிவாசன், ஊர் தலைவர் பூசாரி உட்பட பலர் கலந்து கொண்டனர். விருதுநகர் விருதுநகர் - மதுரை பேருந்து நிறுத்தம் அருகே நடைபெற்ற தக வல் பலகை திறப்பு நிகழ்ச்சிக்கு சிபிஎம் நகர் செயலாளர் எல்.முருகன் தலைமையேற்றார். மாவட்டக்குழு உறுப்பினர் எம்.சுப்புராம் முன்னிலை வகித்தார். துவக்கி வைத்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தொழிற்சங்க பிரிவு தலைவர் சக்திவேல் பேசி னார். தகவல் பலகையை சிஐ டியு தலைவர் எஸ்.பாலசுப்பிர மணியன் திறந்து வைத்தார். மேலும் இதில் சங்க நிர்வாகிகள் ராமபிரான், ராகவன், கருப் பையா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.