districts

சீனாவின் 54 மொபைல் செயலிகளுக்கு தடை

புதுதில்லி, பிப்.14-  சீனாவில் உருவாக்கப்பட்ட 54 மொபைல்  செயலிகளை தடை செய்ய இந்திய அரசு  முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி யுள்ளது. இந்தியா-சீன படைகள் இடையே லடாக்  எல்லையில் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த 2020-ம் ஆண்டு ஜூன்  15-ம் தேதி நள்ளிரவு மோதல் ஏற்பட்டது. இந்த  மோதலில் இந்திய தரப்பில் 20 வீரர்கள் உயிரி ழந்தனர். இந்த மோதலை தொடர்ந்து கடந்த 2020 ஜூன் 29-ம் தேதி டிக்டாக் உள்பட 58 சீன செயலிகளுக்கு இந்திய அரசு  தடை விதித்தது. அதன்பின்னர் மேலும் பல  சீன மொபைல் செயலிகளுக்கு ஒன்றிய அரசு  தடை விதித்தது. இந்நிலையில், பியூட்டி கேமரா, ஸ்வீட்  கேமரா ஹெச்டி, புயூட்டி மேகரா செல்பி, பேஸ் பூஸ்டர், ஆப் லாக்கர், டுயல் ஸ்பேஸ்  லைட் உள்பட மேலும் 54 சீன செயலி களுக்கு தடை விதிக்க ஒன்றிய அரசு முடிவு  செய்துள்ளது.  இந்த 54 சீன செயலிகளுக்கும் தடை விதிப்பது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவலை இந்திய அரசு விரைவில் வெளியிட லாம் என எதிர்பார்க்கப்படுகிறது.