சிவகங்கை, அக்.30- சிவகங்கை மாவட்ட தமிழ்நாடு அறிவியல் இயக் கம், காரைக்குடி மகரிஷி வித்யா மந்திர் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி இணைந்து 31-ஆவது தேசிய குழந்தைகள் அறிவியல் மாவட்ட மாநாடு காரைக்குடியில் நடைபெற்றது. நிகழ்விற்கு சிவகங்கை மாவட்டத் தலைவர் கோபி நாத் தலைமை வகித்தார். மாவட்ட துணைச் செயலா ளர் ராஜூ, மாவட்ட துணைத் தலைவர் குழந்தை ஆரோக் கியமேரி ஆகியோர் முன் னிலை வகித்தனர். காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி ஆய்வு கட்டுரை சமர்ப்பிக்கும் நிகழ்வை தொடங்கி வைத்தார். மாநாட்டில் அறிவியல் ஆய்வு கட்டுரைகளுக்கான இளம் குழந்தை விஞ்ஞானி களின் 118 ஆய்வு கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டு, 12 ஆய்வு கட்டுரைகள் தேர்வு செய் யப்பட்டன. தேர்வு செய் யப்பட்ட மாணவர்கள் நவம்பர் 5 அன்று திரு நெல்வேலி மாவட்டத்தில் உள்ள வள்ளியூரில் நடை பெறும் தெற்கு மண்டல அள விலான மாநாட்டில் பங் கேற்க உள்ளனர்.