இராமநாதபுரம்,மே 30- தமிழ் நாட்டில் 80 லட்சம் இளைஞர் களுக்கு வேலை வாய்ப்பு பெற்றிடவே தமிழ்நாடு முதல்வர் வெளிநாட்டு பயணம் மேற்கொண்டுள்ளார் என்று கடலாடியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் கூறினார். இராமநாதபுரம் மாவட்டம், கடலாடி வடக்கு ஒன்றிய திமுக சார்பில் முத்தமிழ் அறிஞர் கலைஞரின் நூற்றாண்டு விழா. தமிழ்நாடு முதல்வரின் 70 வது பிறந்த நாள் விழா.அரசின் இரண்டாண்டு சாதனை என முப்பெரும் விழா பொதுக்கூட்டம் ஒன்றிய செயலாளர் ஆப்பனூர் ஆறுமுகவேல் ஏற்பாட்டில் கடலாடியில் நடைபெற்றது. இதில், தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை- கதர் கிராம வாரியத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் கலந்துகொண்டு பேசுகையில், இராம நாதபுரம் மாவட்டத்தில் குடிநீர் தட்டுப் பாட்டை போக்கிடவும் வருங்கால சந்ததி யினருக்கு தட்டுப்பாடு இன்றி குடிநீர் கிடைத் திடவும் ரூ.2,819 கோடி மதிப்பிட்டில் சிறப்பு காவேரி கூட்டு குடிநீர் திட்டம் முடிவடைந்த வுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை யில் பிரம்மாண்ட விழா ஏற்படுத்தி திறப்பு விழா நடைபெறும். தமிழ்நாட்டில் 88 லட்சம் இளைஞர்கள் படித்து வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளனர். இவர்களுக்கு முழு வதும் அரசுப்பணி வழங்கிட முடியாது ஆனால் அவர்களுக்கு வேலை வழங்கிட வேண்டும் அதற்காகத்தான் நமது முதல்வர் வெளிநாடு பயணம் மேற்கொண்டுள்ளர். பல லட்சம் கோடி முதலீடுகளை பெற்று தமிழ்நாட்டில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு பெற்றிட வேண்டும் என்ற எண்ணத் துடன் உழைத்துக்கொண்டு இருக்கிறார். தமிழ்நாட்டில் 55 ஆண்டு கால அரசிய லில் நிதானமான தலைவராக முதல்வர் இருந்து வருகிறார் என்று தெரிவித்தார். இந்த கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் சத்தியமூர்த்தி, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் முருகவேல்,மதுரை முன்னாள் மேயரும் முதுகுளத்தூர் சட்டப்பேரவை தொகுதி பொறுப்பாளர் குழந்தைவேலு, மாநில நிர்வாகிகள் சுப.த.திவாகரன்,பெரு நாழி போஸ், மகளிர் ஆணைய உறுப்பினர் எம்.எஸ்.கே.பவானி ராஜேந்திரன், மற்றும் மாநில,மாவட்ட,ஒன்றிய,நகர் பேரூர் கழக நிர்வாகிகள் கிளைக்கழக செயலாளர்கள் கலந்துகொண்டனர்.