சிவகங்கை, பிப்.7- சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்து வமனையில் பிரசவம் பார்க்கும் பெண்களுக்கு அதிக முறை ரத்த தானம் செய்த சிவகங்கை வாலாஜா நவாப் அறக்கட்டளை நிர்வாகிகளுக்கும் உறுப்பி னர்களுக்கும் மருத்துவக் கல்லூரி முதல்வர் பாராட்டி வாழ்த்தினார். சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு பிரச வத்திற்கு வரும் பெண்களுக்கு கடந்த 2020- 2021 ஆம் ஆண்டுகளில் 150 யூனிட் ரத்த தானம் இவர்கள் வழங்கியுள்ளனர். சிவகங்கை மாவட்ட அளவில் அதிக ரத்த தானம் செய்ததாக வாலாஜா நவாப் அறக்கட்டளை தேர்வு செய்யப்பட்டது. அதற்கான சான்றிதழ் மற்றும் நினைவு பரி சீலனை சிவகங்கை மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர் ரேவதி, அறக்கட்டளை நிர்வாகி பாரூக்கிடம் வழங்கினார். இதில், ரத்த வங்கி மருத்துவர்கள் கிருஷ்ணவேணி, வசந்த், ரபிக் முகமது ஆகியோர் கலந்து கொண்டனர்.