தேனி, மார்ச் 19- மின் விபத்தில் படுகாயமடைந்த சிறு வனுக்கு சிகிச்சை மேற்கொள்ள முதல்வர் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.5 லட்சத்தை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். கூடலூரை சேர்ந்தவர் செல்வகுமார். கூலித்தொழிலாளி. இவரது மகன் பகவதி. அதே பகுதியில் உள்ள பள்ளியில் 2-ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 5 மாதங்க ளுக்கு முன்பு மின் விபத்தில் சிக்கி படுகாய மடைந்தார். இதனை தொடர்ந்து சென்னை தலைமை செயலகத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து தனது மகனின் நிலை குறித்து மனு அளித்திருந்தார். சிறுவனின் மருத்துவ சிகிச்சை மற்றும் கல்வி கற்பதற்காக முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.5 லட்சம் வழங்க முதல்வர் உத்தரவிட்டார். அதன்படி பெறப்பட்ட காசோலையை தேனி மாவட்ட ஆட்சியர் முரளிதரன் சிறு வனின் வீட்டிற்கு நேரடியாக சென்று வழங்கி னார். தங்களுக்கு உதவி செய்த முதல்வ ருக்கு செல்வகுமார் குடும்பத்தினர் நன்றி தெரிவித்தனர்.