முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கான உணவு வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நாகப்பட்டி னம் மாவட்டம் திருக்குவளையில் வெள்ளியன்று (ஆக.25) துவங்கி வைத்தார். இதையடுத்து தமிழ்நாடு முழுவ தும் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டத்தை அமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பி னர்கள் துவக்கி வைத்தனர். மதுரை இதன்படி, மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றி யம் துவரிமானில் உள்ள அரசு துவக் கப்பள்ளியில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் காலை உணவு திட்டத்தினை துவக்கி வைத்தார். நிகழ்வில், சு.வெங்கடேசன் எம்.பி., மாணவர்களுக்கு உணவை ஊட்டி விட்டார். மாணவர்களும் எம்.பிக்கு உணவை ஊட்டிவிட்டு மகிழ்ந்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் புறநகர் மாவட்டச் செயலாளர் கே.ராஜேந்திரன், மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.கே.பொன்னுத்தாய் உட்பட பலர் கலந்து கொண்டனர். மதுரை மாவட்டம் கிழக்கு சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட சின்னப் பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பெ.மூர்த்தி பள்ளி குழந்தைகளுக்கான காலை உணவு திட்டத்தை துவக்கி வைத் தார். மதுரை மாவட்ட ஆட்சியர் உட்பட பலர் பங்கேற்றனர். இதேபோல், திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட சூரக்குளம் கிராமத்தில் முதலமைச்ச ரின் காலை உணவு திட்டத்தை விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பி னர் மாணிக்கம் தாகூர் துவக்கி வைத்தார்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் பால வநத்தம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாவட்ட ஆட்சியர் ஜெய சீலன் தலைமையில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் துறை அமைச் சர் தங்கம்தென்னரசு ஆகியோர் திட்டத்தினை தொடங்கி வைத்தனர்.
இராமநாதபுரம்
இராமநாதபுரம் மாவட்டம் மண்ட பம் ஊராட்சி ஒன்றியம் குப்பானி வலசை அரசு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் மாவட்ட ஆட்சி யர் பா.விஷ்ணு சந்திரன் தலைமை யில், பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை மற்றும் கதர் கிராம தொழில் கள் வாரியத் துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் திறந்து வைத்தார்.
திண்டுக்கல்
திண்டுக்கல் மாவட்டத்தில் ஆத்தூர் தொகுதிக்குட்பட்ட செட்டி யபட்டி ஊராட்சி துவக்கப்பள்ளியில் நடைபெற்ற விழாவில் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் இ.பெரியசாமி திட்டத்தை துவங்கி வைத்தார். நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பழனி சண்முகபுரம் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்வை சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி.செந்தில்குமார் தொடங்கி வைத்தார். நகராட்சி தலைவர் உமாமகேஷ்வரி, துணைத்தலைவர் கே.கந்தசாமி, நகராட்சி ஆணை யாளர் பாலமுருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
சிவகங்கை
கண்டவராயன்பட்டி ஊராட்சி ஒன்றியப் துவக்கப்பள்ளியில், நடை பெற்ற நிகழ்வை கூட்டுறவுத்துறை அமைச்சர் அமைச்சர் கேஆர்.பெரிய கருப்பன் பெரியகருப்பன் துவக்கி வைத்தார். மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.