மதுரை, ஜன.7- இரட்டை ரயில் பாதை பணி களுக்காக ரயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கோவில்பட்டி - கடம்பூர் ரயில் நிலையங்களுக்கு இடையே இரட்டை ரயில் பாதை பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளன. இந்த இரட்டை ரயில் பாதை இணைப்பு பணிகள் நடைபெற வேண்டி உள்ளது. அதற்காக இந்த பகுதியில் ரயில் போக்குவரத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள் ளன. முழுமையாக ரத்தாகும் ரயில்கள் ஜனவரி 9 அன்று இராமேஸ்வ ரத்தில் இருந்து புறப்பட வேண்டிய கன்னியாகுமரி விரைவு ரயில் (22622) மற்றும் ஜனவரி 10 அன்று கன்னியாகுமரியில் இருந்து புறப் பட வேண்டிய ராமேஸ்வரம் விரைவு ரயில் (22621) ஆகியவை முழுமை யாக ரத்து செய்யப்படுகிறது. மேலும் திருச்சி - திருவனந்தபுரம் - திருச்சி இன்டர்சிட்டி ரயில்கள் (22627/22628) ஜனவரி 11 அன்று முழுமையாக ரத்து செய்யப்படு கிறது.
பகுதியாக ரத்தாகும் ரயில்கள் பாலக்காடு - திருச்செந்தூர் - பாலக்காடு விரைவு ரயில்கள் (16731/16732) ஜனவரி 8, 9, 11 ஆகிய நாட்களில் விருதுநகர் - திருச்செந்தூர் இடையேயும் ஜன வரி 10 அன்று மதுரை - திருச்செந் தூர் இடையேயும் பகுதியாக ரத்து செய்யப்படும். ஜனவரி 8, 9, 10 ஆகிய நாட்களில் ஈரோட்டில் இருந்து புறப்பட வேண் டிய திருநெல்வேலி விரைவு ரயில் (16845) மற்றும் ஜனவரி 9, 10, 11 ஆகிய நாட்களில் திருநெல்வேலி யில் இருந்து புறப்பட வேண்டிய ஈரோடு விரைவு ரயில் (16846) ஆகி யவை திண்டுக்கல் - திருநெல்வேலி இடையே பகுதியாக ரத்து செய் யப்படுகிறது. ஜனவரி 8, 9, 10 ஆகிய நாட்களில் தாம்பரத்திலிருந்து புறப்பட வேண்டிய நாகர்கோவில் அந்தி யோதயா விரைவு ரயில் (20691) மற் றும் ஜனவரி 9, 10, 11 ஆகிய நாட்க ளில் நாகர்கோவில் இருந்து புறப் பட வேண்டிய தாம்பரம் அந்தியோ தயா விரைவு ரயில் (20692) ஆகி யவை திருச்சி - நாகர்கோவில் இடையே பகுதியாக ரத்து செய்யப் படுகிறது. கோயம்புத்தூர்- நாகர் கோவில்- கோயம்புத்தூர் பகல் நேர விரைவு ரயில்கள் (16322/16321) ஜனவரி 9, 10, 11 ஆகிய நாட்களில் ஈரோடு - நாகர்கோவில் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. ஜனவரி 9, 10 அன்று புனலூ ரில் இருந்து புறப்பட வேண்டிய மதுரை விரைவு ரயில் (16730) மற் றும் ஜனவரி 10, 11 அன்று மதுரை யிலிருந்து புறப்பட வேண்டிய புன லூர் விரைவு ரயில் (16731) ஆகி யவை திருநெல்வேலி - மதுரை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. ஜனவரி 9, 10 அன்று சென்னை யில் இருந்து புறப்பட வேண்டிய திருச்செந்தூர் விரைவு ரயில் (16105) மற்றும் ஜனவரி 10, 11 அன்று திருச்செந்தூரில் இருந்து புறப்பட வேண்டிய சென்னை எழும்பூர்-திருச் செந்தூர் விரைவு ரயில் (16106) ஆகியவை திருச்சி - திருச்செந்தூர் இடையே பகுதி யாக ரத்து செய்யப்படுகிறது. ஜனவரி 10 அன்று மைசூரில் இருந்து புறப்பட வேண்டிய தூத் துக்குடி விரைவு ரயில் (16236) மற்றும் ஜனவரி 11 அன்று தூத் துக்குடியில் இருந்து புறப்பட வேண்டிய மைசூர் விரைவு ரயில் (16235) ஆகியவை
விருதுநகர் - தூத்துக்குடி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. மாற்று பாதையில் இயக்கப்படும் ரயில்கள் ஜனவரி 10 அன்று சென்னை யில் இருந்து புறப்பட வேண்டிய குருவாயூர் விரைவு ரயில் (16127) மற்றும் ஜனவரி 10 அன்று குரு வாயூரில் இருந்து புறப்பட வேண் டிய சென்னை எழும்பூர் விரைவு ரயில் (16128) ஆகியவை திரு நெல்வேலி, தென்காசி, இராஜ பாளையம், விருதுநகர் வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டு முறையே 160 மற்றும் 125 நிமி டங்கள் காலதாமதமாக திரு நெல்வேலி மற்றும் திருச்சி சென்று சேரும். ஜனவரி 10 அன்று பெங்களூரு வில் இருந்து புறப்பட வேண்டிய நாகர்கோவில் விரைவு ரயில் (17235) விருதுநகர், இராஜபாளை யம், தென்காசி வழியாக மாற்றுப் பாதையில் இயக்கப்பட்டு 140 நிமி டங்கள் கால தாமதமாக திருநெல் வேலி சென்று சேரும். கால தாமதமாகும் ரயில்கள் ஜனவரி 10 அன்று திருவனந்த புரத்தில் இருந்து புறப்பட வேண் டிய திருச்சி இன்டர்சிட்டி விரைவு ரயில் (22628) 90 நிமிடங்கள் கால தாமதமாக திருச்சி சென்று சேரும். ஜனவரி 10 அன்று சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட வேண்டிய நெல்லை விரைவு ரயில் (12631) மற்றும் முத்து நகர் விரைவு ரயில் (12693) ஆகியவை முறையே 40 மற்றும் 30 நிமிடங்கள் கால தாம தமாக திருநெல்வேலி மற்றும் தூத் துக்குடி சென்று சேரும். ஜனவரி 12 அன்று திருச்செந் தூர் - வாஞ்சி மணியாச்சி சிறப்பு ரயில் (06680) திருச்செந்தூரில் இருந்து 110 நிமிடங்கள் காலதாமத மாக புறப்படும் என்று மதுரை கோட்ட ரயில்வே நிர்வாகம் வெளி யிட்டுள்ள அறிக்கையில் தெரிவித் துள்ளது.