பழனி, ஆக.27- சந்திரனின் தென்துரு வத்தில் கால் பதித்த முதல் நாடு என்ற பெருமையை சந்திரயான்-3 இந்தியாவிற்கு பெற்று தந்துள்ளது. இந்தத் திட்டத்தின் வெற்றி பய ணத்தில் பழனியைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இருவர் பணி யாற்றியுள்ளனர். பழனி, சத்திரப்பட்டி அரு கேயுள்ள வேலூர் கிரா மத்தைச் சேர்ந்தவர் ரவிக் குமார். இவர் வேலூரில் உள்ள அரசு பள்ளியில் உயர் நிலை கல்வி பயின்று, பழனி யாண்டவர் பாலிடெக்னிக் கில் பட்டயப் படிப்பை முடித்தார். பின்னர் பி.இ.எல் (BEL) நிறுவனத்தில் பயின்று, இஸ்ரோவில் பணியில் சேர்ந்தார். பணியில் இருந்து கொண்டே இளங்கலை, முதுகலை பட்டங்களை பெற்று, இஸ்ரோவில் விண்கலம் ஏவுவதற்கான எலக்ட்ரானிக்ஸ் கட்டளை கள் பிறப்பிக்கும் பணியை செய்து வருகிறார். தற்போது இவர் ஜியோ எலக்ட்ரானிக் கண்ட்ரோல் சிஸ்டம் துறை தலைவராக பணிபுரிகிறார். மேலும், இவர் தற்போது சந்திரயான்-3 மூலம் அனுப் பப்பட்டுள்ள விக்ரம் லேண்ட ருக்கு கட்டளைகளை பிறப் பிக்கும் கணிதப் பொறியியல் துறைத்தலைவராக பணிபுரி வது குறிப்பிடத்தக்கது. பழனி அருகே உள்ள கணக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்த கௌரி மணி, சந்திர யான்-3 திட்டத்தில் டெலி கமாண்ட் சாப்ட்வேர் வடி வமைப்பாளராக செயல்பட் டுள்ளார் என்பது குறிப்பி டத்தக்கது.