districts

img

தூத்துக்குடியில் சிபிஎம் வேட்பாளர்களை ஆதரித்து மத்திய குழு உறுப்பினர் வாசுகி வாக்கு சேகரிப்பு

தூத்துக்குடி, பிப்.12- நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் புதூர் பேரூராட்சியில் அமைந்துள்ள திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 12 வது வார்டு வேட்பாளர் ராஜேஸ்வரி மற்றும் 14 வது வார்டு வேட்பாளர் ஆண்டி ஆகி யோரை ஆதரித்து மார்க்சிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் வாசுகி தலைமையில் பொதுமக்களிடையே வாக்கு சேகரிக்கப்பட்டது. இந்நிகழ்வில், மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் கே.பி.ஆறுமுகம், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.ரசல், பா.புவிராஜ், புதூர் கிளை செயலாளர் செந்தில்வேல், மேல் அருணாசலபுரம் ஊராட்சி மன்ற தலைவர் சண்முக சுந்தரம், நாகலாபுரம் கிளை செய லாளர் கிருஷ்ண மூர்த்தி, சின்ன வநாயக்கன்பட்டி கிளை செயலா ளர் ஜெகநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.