புத்தாண்டு கொண்டாட்டம் அதிவேகமாக பைக் ஓட்டிய 17பேர் மீது வழக்கு!
தூத்துக்குடி, ஜன.1- தூத்துக்குடியில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் அதி வேகமாக மோட்டார் பைக் ஓட்டிச் சென்ற 17 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. புத்தாண்டை முன்னிட்டு சனிக்கிழமை நள்ளிரவு சாலை யில் விதிமுறைகளை மீறி அதிவேகமாக மோட்டார் சைக் கிள் ஓட்டிச் சென்றால் அதனை பறிமுதல் செய்து வழக் குப்பதிவு செய்யப்படும் என மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் எச்சரிக்கை விடுத்திருந்தார். அதன்படி வடபாகம் காவல் ஆய்வாளர் ரபிசு ஜின்ஜோஸ், துணை காவல் ஆய்வாளர் சிவராஜன், தனிப் பிரிவு காவலர் அருணாச்சலம் ஆகியோர் மட்டக்கடை பகு தியில் ரோந்து பணியில் ஈடுபட்டடிருந்தனர். சனிக்கிழமை நள்ளிரவு அப்பகுதியில் சிலர் விதிமுறைகளை மீறி அதி வேகமாக மோட்டார் சைக்கிளை ஓட்டி சென்றனர். இதை யடுத்து போலீசார் அவர்களை விரட்டி சென்று பிடித்தனர். மட்டக்கடை பகுதியில் அதிவேகமாக சென்ற 17 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்கள் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.
நெல்லை மாநகரில் 15 நாட்களுக்கு தடை உத்தரவு
திருநெல்வேலி, ஜன.1- நெல்லை மாநகரில் 15 நாட்களுக்கு தடை உத்தரவு பிறக்கப்பட்டு உள்ளது. நெல்லை மாநகர காவல் ஆணையர் அவி னாஷ்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி யிருப்பதாவது:- நெல்லை மாநகரில் சனிக்கிழமை நள்ளி ரவு முதல் வருகிற 14-ந் தேதி வரை 15 நாட்களுக்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதையொட்டி அதி கமானோர் கூடுதல், பொதுகூட்டங்கள், ஆர்ப்பாட்டம், போராட்டங்கள் நடத்தக்கூடாது. பொது அமைதி, பொது மக்கள் பாதுகாப்பு கருதி இந்த உத்தரவு பிறப்பிக்கப் பட்டு உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் ஜன.3 முதல் மின் வாரிய குறைதீர் கூட்டங்கள்
திருநெல்வேலி, ஜன.1- நெல்லை தென்காசி மாவட்டங்களில் உள்ள மின் வாரிய கோட்ட அலுவலகங்களில் வரும் ஜனவரி 3 ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை மின்வாரிய குறைதீர் கூட்டங்கள் நடைபெறவுள்ளன. இது தொடர்பாக நெல்லை மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் குருசாமி வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் உள்ள மின்வாரிய கோட்ட அலுவலகங்களில் வரும் ஜனவரி 3 ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை மின்வாரிய குறைதீர் கூட்டங்கள் காலை 11 மணியளவில் நடைபெறவுள்ளன. அதன்படி, வரும் 3ஆம் தேதி வள்ளியூர்கோட்ட அலு வலகத்திலும், 6ஆம் தேதி சங்கரன்கோவில் கோட்ட அலு வலகத்திலும், 10 ஆம் தேதி திருநெல்வேலி கிராமப்புற கோட்ட அலுவலகத்திலும், வரும் 13ஆம் தேதி கடைய நல்லூர் கோட்ட அலுவல கத்திலும் மின்வாரிய குறைதீர் கூட்டம் நடைபெறவுள்ளது.இதேபோல், வரும் 19ஆம் தேதி திருநெல்வேலி நகர்ப்புற கோட்ட அலுவலகத்திலும், வரும் 20ஆம் தேதி தென்காசி கோட்ட அலுவல கத்திலும், 24ஆம் தேதி கல்லிடைக்குறிச்சி கோட்ட அலுவலகத்தி லும் மின்வாரிய குறைதீர் கூட்டம் நடைபெறவுள்ளது.
மதுரை மீனாட்சியம்மன் கோவில் பெயரில் மோசடி விளம்பரம் டிரஸ்ட் உரிமையாளர்கள் மீது வழக்கு
மதுரை, ஜன.1- உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவி லுக்கு வெளி மாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்து மக்கள் வருகை தருகின்றனர் இந்நிலையில் மதுரை கடச்சனேந்தல் பகுதியில் செயல்படும் காவேரி சேவா டிரஸ்ட் என்ற ஒரு அமைப்பா னது பக்தர்களை ஏமாற்றும் வகையில் ஆயிரம் ரூபாய் தங்களுடைய டிரஸ்ட் வங்கி கணக்கிற்கு அனுப்பினால் மீனாட்சியம்மன் கோவிலில் அம்மனுக்கு பணம் அனுப்ப வர்கள் பெயரில் மாதம்தோறும் முதல்வாரத்தில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டு குங்குமம் வீட்டு முகவரிகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என மோசடியான விளம்பரத்தை பதிவு செய்துள்ளனர் இதனை நம்பி ஏராளமான வெளிநாடுகளைச் சேர்ந்த வர்கள் டிரஸ்டுக்கு பணம் செலுத்துவதாக மீனாட்சி யம்மன் கோவில் நிர்வாகத்திற்கு தொடர்ச்சியாக புகார் வந்துள்ளது. இதனையடுத்து வெள்ளியன்று மீனாட்சி அம்மன் கோவில் கண்காணிப்பாளர் ஆறுமுகம் அளித்த புகாரின் அடிப்படையில் மீனாட்சி அம்மன் கோவில் காவல்துறை யினர், காவேரி சேவா டிரஸ்ட் உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்
காதல் திருமணம் செய்த வாலிபர் வெட்டிக்கொலை: 2 பேர் கைது
திருநெல்வேலி, ஜன.1- நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி ஆட்டுதட்டை தெருவை சேர்ந்தவர் முருகன்( 28). இவரது மனைவி முத்துலெட்சுமி(25). இவர்கள் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு காத லித்து திருமணம் செய்து கொண்டனர். இவர் களுக்கு 2 வயதில் ஒரு மகளும், 9 மாதத்தில் மகனும் உள்ளனர். தற்போது முத்துலெட்சுமி கர்ப்பிணியாக உள்ளார். முருகன் குமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள வெள்ளமடத்தில் தங்கியிருந்து கையுறை தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இதனால் முத்துலெட்சுமி தனது சொந்த ஊரான சேரன்மகாதேவி அருகே உள்ள பத்தமடை சிவானந்தா காலனி காந்தி நகரில் குழந்தைகளுடன் வசித்து வந்தார். இந்நிலையில் புத்தாண்டை கொண்டா டும்விதமாக சொந்த ஊருக்கு வந்த முருகன் சனிக்கிழமை இரவில் கடையில் கேக் வாங்கி கொண்டு வீட்டுக்கு வந்துள்ளார். அவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த போது அங்கு அதே பகுதியில் வசிக்கும் முருகனின் உறவின ரான மணிராஜ் என்பவரது மகன் ரவிச்சந்தி ரன், தனது தந்தை அழைப்பதாக கூறி முரு கனை அழைத்து சென்றுள்ளார். பின்னர் நள்ளிரவு நேரமாகியும் முருகன் வீட்டுக்கு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த முத்து லெட்சுமி தனது உறவினர்களை அழைத்துக் கொண்டு மணிராஜ் வீட்டுக்கு சென்றுள்ளார். அங்குள்ள ஆடு கட்டும் தொழுவத்தில் பலத்த வெட்டுக்காயங்களுடன் முருகன் இறந்து கிடந்தார். அவரது மண்டை ஓடு சிதைந்து மூளை வெளியே வந்த நிலையில் அவர் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.இதனை பார்த்து முத்துலெட்சுமி அலறித் துடித்தார். தகவல் அறிந்து அங்கு வந்த பத்த மடை போலீசார், முருகன் உடலை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக காவல் துணை ஆய்வாளர் கண்ணன் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளி யாகின.
நாகர்கோவிலில் இருந்து சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் முருகன் சொந்த ஊருக்கு வந்துவிடுவார். அப்போது உறவின ரான மணிராஜ் வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். அப்போது மணிராஜின் மகளி டம் பேசி வந்ததாக கூறப்படுகிறது. இதனை சிலர் தவறாக பேசி உள்ளனர். இதனால் இனி வீட்டுக்கு வரவேண்டாம் என்று முருகனை, மணிராஜ் கண்டித்துள்ளார். இது தொடர்பாக அவர்களுக்குள் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. தொடர்ந்து ஆத்திரத்தில் இருந்து வந்த மணிராஜ் மற்றும் அவரது மகன் ரவிச்சந்திரன் ஆகியோர் முருகனை கொலை செய்ய முடிவு செய்துள்ளனர். அதன்படி சனிக் கிழமை இரவு முருகனை தங்களது வீட்டுக்கு அழைத்து வந்துள்ளனர். அங்கு வைத்து அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டதில், மணிராஜ் மற்றும் அவரது உறவினரான அதே பகுதியை சேர்ந்த முத்துராஜ் என்பவரும் சேர்ந்து அரிவாளால் சரமாரியாக முருகனை வெட்டிக்கொலை செய்துவிட்டு தப்பி ஓடியது விசாரணையில் தெரியவந்தது. கொலை தொடர்பாக மணிராஜ், அவரது மகன் ரவிச் சந்திரன் மற்றும் உறவினர் முத்துராஜ் ஆகி யோரை போலீசார் வலைவீசி தேடி வந்த நிலை யில் ஞாயிற்றுக்கிழமை காலை மணிராஜ் மற்றும் அவரது உறவினர் முத்துராஜை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஓடும் பேருந்தில் திருட்டு: 4 பேர் கைது
திருச்சிராப்பள்ளி, ஜன.1 - திருச்சி பீமநகர் புது ராஜா காலனியைச் சேர்ந்தவர் சுந்தரேசன் (54). இவர் திருச்சி - திண்டுக்கல் சாலை கோரையாற்று பாலம் அருகே நின்று கொண்டிருந்த போது, இருவர் கத்தி முனையில் மிரட்டி அவரிடம் இருந்த பணத்தைப் பறித்துச் சென்று விட்டனர். இது தொடர்பாக செசன்ஸ் கோர்ட் காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். பின்னர் இந்த வழக்கு தொடர்பாக தாராநல்லூரை சேர்ந்த திவாகர், கிரண்குமார் ஆகி யோரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து கத்தி, பணம் பறிமுதல் செய்யப்பட்டது. ஓடும் பேருந்தில் பணம் திருட்டு திருச்சி பிச்சாண்டார் கோவில் பகுதியைச் சேர்ந்த விஜயலட்சுமி என்பவர், டவுன் பேருந்தில் சென்று கொண்டிருந்த போது, அவரிடமிருந்து பணத்தை திருடி விட்டனர். இது தொடர்பாக கோட்டை குற்ற பிரிவு போலீ சார் வழக்குப் பதிந்து திருச்சி துவாக்குடியைச் சேர்ந்த பவானி, அபிராமி ஆகிய இரண்டு பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
பயிற்சி கூட்டம்
பாபநாசம், ஜன.1 - ‘நம் ஊராட்சி; நம் பள்ளி; நம் பெருமை’ என்றத் தலைப் பில் ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கான பயிற்சி கூட்டம் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ஊராட்சி ஒன்றிய அலுவ லகத்தில் நடந்தது. தமிழ்நாடு அரசின் ஒருங்கிணைந்த பள்ளி கல்வித் துறையின் பள்ளி மேலாண்மைக் குழு சார்பில் நடந்த பயிற்சியை பாபநாசம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் சுமதி துவக்கி வைத்து, பயிற்சி கையேடு களை வழங்கினார். பள்ளிக் கல்வித் துறையின் மூலம் கல்வியின் தரத்தை உயர்த்த மேற்கொள்ளப் பட்டு வரும் திட்டங்கள் குறித்து பேசினார். இதில் வட்டார வளர்ச்சி அலு வலர்கள், கல்வி அலுவலர்கள் பங்கேற்றனர்.
24 மணி நேரமும் கண்காணிப்பு
கும்பகோணம், ஜன.1- தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர், நாச்சியார் கோவில் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நிகழும் பல்வேறு குற்றச் சம்பவங்களையும் அசம்பாவி தங்களையும் போக்குவரத்து நெரிசலையும் கட்டுப் படுத்த, நாச்சியார்கோவில் காவல்துறை சார்பில் கடை வீதி மற்றும் முக்கிய வீதிகளில் கேமராக்கள் பொருத்தப் பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதன் தொடக்க நிகழ்ச்சியை, நாச்சியார்கோவில் காவல் நிலைய கட்டுப்பாட்டு அறையில் திருவிடை மருதூர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஜாபர் சித்திக் துவக்கி வைத்தார். நாச்சியார்கோவில் காவல் துறை ஆய்வாளர் ரேகா ராணி, கேமரா உபகரணங் களை நன்கொடையாக வழங்கிய ரோட்டரி சங்க தலைவர் சுந்தர்ராஜன், செயலாளர் பாலமுருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ரேசன் கடைகளில் ஆய்வு
மயிலாடுதுறை, ஜன.1 - மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டத்தில் 94 ரேசன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலை யில் செம்பனார்கோயில் அருகே நவீன மயமாக்கப்பட்ட ரேசன் கடைகள் உள்ள கிடாரங்கொண்டான், பொன் செய், கஞ்சாநகரம் ஆகிய பகுதி கடைகளில் மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா ஆய்வு மேற்கொண்டார். அரிசி, பருப்பு, சீனி ஆயில் உள்ளிட்ட பொருட்களின் இருப்பு மற்றும் தரம் குறித்து ஆய்வு செய்தார். பின்னர் அங்குள்ள அலுவலர்களிடம் ரேசன் பொருட்களை தர மாக விநியோகம் செய்ய அறிவுறுத்தினார். மேலும் பயோ மெட்ரிக் மெஷினை பார்வையிட்டு, அதன் செயல்பாடு கள் சரியாக உள்ளதா என கேட்டறிந்தார். ஆய்வின் போது தரங்கம்பாடி வட்ட வழங்கல் அலுவலர் விஜய குமார் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.
முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிக்கு முன்பதிவு அவசியம்
புதுக்கோட்டை, ஜன.1 - மாவட்ட, மண்டல, மாநில அளவில் நடத்தப்பட உள்ள தமிழக முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டி களில் கலந்து கொள்ள முன்பதிவு அவசியம் என புதுக் கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தெரி வித்துள்ளார். பொதுப் பிரிவில் 15 வயது முதல் 35 வயது வரை உள்ள ஆண்கள் மற்றும் பெண்களுக்கு மாவட்ட அளவில் கபாடி, சிலம்பம், தடகளம், இறகுபந்து, கையுந்துபந்து போன்ற போட்டிகள் நடத்தப்படும். பள்ளி மற்றும் கல்லூரி மாண வர்களுக்கு மாவட்ட அளவில் கபாடி, சிலம்பம், தடகளம், கூடைப்பந்து, இறகுப்பந்து, கால்பந்து, வளைகோல் பந்து, நீச்சல், கையுந்துப்பந்து மற்றும் மேசைப்பந்து போட்டிகளும், மண்டல அளவில் டென்னிஸ், பளுதூக்கு தல், கடற்கரை கையுந்துபந்து போட்டிகளும் நடத்தப்பட வுள்ளன. மேலும், மாற்றுத்திறனாளிகள், மனவளர்ச்சி குன்றி யோர் மற்றும் அரசு ஊழியர்களுக்கும் போட்டிகள் நடத்தப் படும். இந்த போட்டிகளில் கலந்துகொள்ள விருப்பம் உள்ள விளையாட்டு வீரர்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (www.sdat.tn.gov.in) என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். நேரடியாக போட்டிகளில் பங்குபெற அனுமதி இல்லை. கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலரை 7401703498 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
8 ஆண்டுகளாக படுக்கையில் கிடக்கும் இளைஞர் காப்பகத்தில் சேர்க்க அரசுக்கு வேண்டுகோள்
பொன்னமராவதி, ஜன.1 - புதுக்கோட்டை மாவட் டம் பொன்னமராவதி பாண்டி மான் கோவில் வீதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (34). இவர் 8 வருடங் களுக்கு முன்பு சொந்தமாக மெக்கானிக் தொழில் நடத்தி வந்தார். இந்நிலையில் கடந்த எட்டு வருடத்திற்கு முன்பு நிகழ்ந்த விபத்தில் காயம் அடைந்து மருத்துவமனை யில் சேர்க்கப்பட்டார். நாள டைவில் அவரது ஒவ்வொரு பகுதி நரம்பும் பாதிக்கப் பட்டு, பிறகு தலைக்கு கீழ் உள்ள பகுதி முழுவதுமாக பாதிக்கப்பட்டது. நரம்பு மண்டலம் முழுவதுமாக பாதிக்கப்பட்ட அவரை திருச்சி, புதுக்கோட்டை, தஞ் சாவூர், மதுரை என பல்வேறு பகுதி மருத்துவ மனைகளுக்கு அழைத்துச் சென்றும் முன்னேற்றம் ஏற்படவில்லை. வெங்கடேசனால் பேச, சாப்பிட மட்டும் முடியுமே தவிர, மற்றபடி தலைக்கு கீழ் உள்ள பகுதி கள் உணர்ச்சியற்று உள்ளது. இயற்கை உபாதைகளை யும் படுக்கையிலேயே கழிப் பதால், வெங்கடேசன் மிகுந்த அவதிக்குள்ளாகி இருக்கிறார். இவ்வாறு 8 வருடமாக போராடி வரும் வெங்கடேசனை அவரது தாய் நாச்சம்மை கவனித்து வருகிறார். வயது முதிர்வு காரண மாக அவரும் சர்க்கரை நோயால் அவதிப்படுவதால் வெங்கடேசனை பராமரிக்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே உடல் நலம் பாதிக்கப்பட்டு படுத்த படுக் கையாக கிடக்கும் வெங்கடே சனை அரசு காப்பகத்தில் சேர்க்க தமிழக அரசு உதவ வேண்டும் என அவரது தாயாரும், வெங்கடேசனும் கண்ணீருடன் வேண்டு கோள் விடுத்துள்ளனர்.
மரக்கன்றுகள் நடல்
பேராவூரணி, ஜன.1 - தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி காவல் நிலையத்தில் முன்புறம், தனி யார் தொண்டு நிறுவனம் சார்பில் ரூ.50 ஆயிரம் செலவில், இரும்பு வேலி அமைத்து மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கும் பணி நடைபெற்றது. காவல் உதவி ஆய்வாளர் ஆஸ்மி தலைமை வகித்தார். சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் வீரமணி, துரைராஜ் முன்னிலை வகித்தனர். தனியார் தொண்டு நிறுவனத் தலைவர் அக்ரி நடராஜன் மரக்கன்றுகள் நட்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இதில், காவல் துறையினர், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர். தொண்டு நிறுவன பிரதிநிதி நீலகண்டன் நன்றி கூறினார்.
நம்மாழ்வாருக்கு மணிமண்டபம் அமைக்கக் கோரிக்கை
தஞ்சாவூர், ஜன.1- தஞ்சாவூரில் நம்மாழ்வார் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. வாழ்வாதாரப் பாதுகாப்பு இயக்கம் நிறுவனர் மற்றும் தலைவர் பா.பாரதி தாசன் தலைமை வகித்தார். அகில இந்திய மக்கள் சேவை இயக்க விவசா யப் பிரிவு மாநிலத் தலைவர் தங்க சண்முகசுந்தரம் முன்னிலை வகித்தார். இதில், நம்மாழ்வாருக்கு தமிழக அரசு மணிமண்டபம் ஏற்படுத்த வேண்டும். அவரது நினைவு நாளை தமிழக அரசு விழாவாக அறிவிக்க வேண்டும். திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது போல், நம்மாழ்வார் பெயரில் இயற்கை வேளாண் ஆராய்ச்சி நிலையம் ஏற்படுத்தித் தர நடவடிக் கைகள் எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டன.
சிபிஎம் கோரிக்கையை ஏற்று விரைந்து நடக்கும் தஞ்சை - வேளாங்கண்ணி நெடுஞ்சாலைப் பணி
திருவாரூர், ஜன.1 - தஞ்சையிலிருந்து வேளாங்கண்ணி வரை நடை பெறும் தேசிய நெடுஞ்சா லைப் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக் கப்பட்டு உள்ளது. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திரு வாரூர் மாவட்டச் செயலா ளர் ஜி.சுந்தரமூர்த்தி விடுத் துள்ள அறிக்கையில் கூறி யிருப்பதாவது: திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரியில் கடந்த டிசம்பர் 17 ஆம் தேதி சிபிஎம் அரசியல் பேரவை நடைபெற் றது. இதில் பங்கேற்ற கட்சி யின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராம கிருஷ்ணன் செய்தியாளர் களுக்கு பேட்டியளித்தார். அப்போது, தஞ்சையில் இருந்து வேளாங்கண்ணி வரை நடைபெறும் தேசிய நெடுஞ்சாலைப் பணி தாமத மாக நடைபெறுகிறது. இத னால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். சாலை மிகவும் மோசம டைந்து சாலை முழுவதும் பள்ளங்கள் இருப்பதால், அடிக்கடி விபத்து நிகழ்கிறது. இந்த தேசிய நெடுஞ் சாலை பணியை விரைந்து முடிக்க வேண்டும் எனக் கோரி திருவாரூர், நீடாமங்க லம் மற்றும் கொரடாச்சேரி - கிளரியம் உள்ளிட்ட பகுதி களில் கட்சியின் சார்பாக கடந்த மாதங்களில் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட் டத்தின் போது, பேச்சு வார்த்தையில் அதிகாரிகள் உறுதியளித்தபடி தற் போது வரை சாலைப் பணி விரைந்து நடைபெறவில்லை. எனவே தமிழக முதல மைச்சர் இதில் தனி கவ னம் செலுத்தி, சம்பந்தப் பட்ட துறை சார்ந்த அதிகாரி களை தொடர்பு கொண்டு, விரைந்து பணியை மேற் கொள்ள அறிவுறுத்த வேண் டும்” என தெரிவித்தார். இதனையடுத்து, தற் போது நீடாமங்கலம்-வயகளத் தூர் பாலம் அருகிலிருந்து சாலை பணி துவங்கி நடை பெற்று வருகிறது. சிபிஎம் கோரிக்கையை ஏற்று சாலைப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இருந்தாலும், பணியின் போது இருபுறமும் பள்ளமும் மேடுமாக உள் ளது. பள்ளமாக உள்ள பகுதி யையும் சீர்படுத்தி சாலை பணியை தரமாக மேற் கொள்ள வேண்டும். இப் பணியை விரைந்து மேற் கொள்ள நடவடிக்கை எடுத்த அனைவருக்கும் சிபிஎம் திரு வாரூர் மாவட்ட குழு சார்பாக நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறி யுள்ளார்.