உத்தரப்பிரதேசத்தில் போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது கார் ஏற்றி கொலை செய்த வழக்கில் தொடர்புடைய ஒன்றிய இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா மகன் ஆஷிஷ் மிஸ்ராவிற்கு ஜாமீன் வழங்கப்பட்டதை கண்டித்து தேனி மாவட்டம் கடமலைக்குண்டுவில் அகில இந்திய விவசாயிகள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் கடமலை-மயிலை ஒன்றியத் தலைவர் ராமசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடமலை-மயிலை ஒன்றியச் செயலாளர் போஸ், எல்.சங்கரசுப்பு ஆகியோர் கலந்துகொண்டனர்.