districts

img

மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகராட்சி 16வது வார்டு சிபிஎம் வேட்பாளர் எஸ்.வினோதினி வெள்ளியன்று நகராட்சி அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தார். சிபிஎம் மாவட்ட செயலாளர் காசிநாத துரை, மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.மயில்வாகனன், தாலுகா செயலாளர் டி.ராஜா, மாவட்ட குழு உறுப்பினர் தட்சிணாமூர்த்தி, தேர்தல் பொறுப்பாளர் திமுக நிர்வாகிகள் கயல் கார்த்திக், பாய் கடை சுரேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சி 4வது வார்டில் போட்டியிடும் எம்.சூரியகலா வெள்ளியன்று நகராட்சி அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தார். சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கண்ணகி, தாலுகா செயலாளர் ஆர்.மகாலிங்கம், மாவட்டக் குழு உறுப்பினர்கள் என்.வெங்கடேஷ், பி.செல்வராஜ், திமுக நிர்வாகிகள் கென்னடி, சகுபர் சாதிக், மதிமுக நிர்வாகி சங்குத் துரை, விசிக நிர்வாகி பஞ்சநாதன், சிபிஎம் தாலுகா குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இராமேஸ்வரம் நகர் மன்றம் 2 வது வார்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடும் க.கருணாகரன் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். தாலுகா செயலாளர் ஜி.சிவா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

அரசுப் பள்ளியில் படித்து அரசு உள் இட ஒதுக்கீட்டில் மருத்துவக்கல்வி பயில இடம் கிடைத்துள்ள மதுரை மாவட்டம், உசிலம்பட்டி வட்டம் பானாமூப்பன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த தங்கப்பேச்சி அவர்களை  மாவட்ட ஆட்சியர் மரு.எஸ்.அனீஷ் சேகர், அவரது இல்லத்தில் பிப்ரவரி 3 வியாழனன்று நேரில் சந்தித்து, ஸ்டெதாஸ்கோப் கருவி வழங்கி, சால்வை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தார். மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் ஆர்.சுவாமிநாதன் உடனிருந்தார்.