districts

சாலை ஆய்வாளர்கள் பதவி இறக்க உத்தரவு ரத்து: உயர்நீதிமன்றம்

விருதுநகர், ஜூலை 11- நெடுஞ்சாலைத்துறையில் 20க்கும் மேற்பட்ட சாலை ஆய்வா ளர்களை பதவி இறக்கம் செய்த  உத்தரவை சென்னை உயர்நீதி மன்ற மதுரைக் கிளை ரத்து செய்து உத்தரவிட்டது. இதனால், சாலை ஆய்வாளர்கள் மீண்டும் தங்களது வழக்கமான பணிகளைத் தொடர்ந்  தனர். சாலை ஆய்வாளர்கள் பதவி  உயர்வு தொடர்பாக கடந்த 2017 நவம்பர் 20 இல் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை அர சாணை 114ஐ வெளியிட்டது. அதில்,  இனி 10 மற்றும்12 ஆம் வகுப்புக்கு இணையாள கல்வித் தகுதியை ஏற்றுக் கொள்ளக் கூடாது என அதில் கூறப்பட்டிருந்தது. இதையடுத்து, அனைத்துத் துறை அலுவலர்களுக்கும் இந்த  அரசாணை அனுப்பி வைத்து தெளிவுபடுத்தப்பட்டன. இந்த உத் தரவை, நெடுஞ்சாலைத்துறை முதன்மை இயக்குநர், கோட்டப்  பொறியாளர்களுக்கு தெளிவு படுத்தவில்லை. இதனால், கடந்த 2018 முதல்  2022 வரை சாலைப் ஆய்வாளர்  களாக பணிபுரிந்து வந்த விருது நகர், மதுரை, திண்டுக்கள், தூத் துக்குடி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட சாலை  ஆய்வாளர்களை பதவி இறக்கம்  செய்து சாலைப் பணியாளர்களாக அறிவித்தனர். இதை எதிர்த்து, தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை திறன்மிகு உதவியாளர்கள் (சாலை ஆய்வா ளர்கள்) சங்கத்தின் வழிகாட்டுத லின் பேரில் சென்னை உயர்நீதி மன்ற மதுரைக் கிளையில் பாதிக் கப்பட்டவர்கள் மனுத்தாக்கல் செய்தனர். ஆனால், நீதிமன்றம் இதனை உறுதிப்படுத்தியது. இதையடுத்து, டிவிஷன் பெஞ்சில் மேல் முறையீடு செய்தனர்.

கடந்த ஜூலை 5ம் தேதி, மனுவை விசாரித்த டிவிஷன் பெஞ்சைச் சேர்ந்த இரு நீதிபதிகள், இந்த  வழக்கில் பதவி இறக்கம் செய்யப் பட்ட சாலை ஆய்வாளர்கள் அனை வரும் கடந்த 2017 நவம்பர் 20 க்கு  முன்பே பதவி உயர்வு பெற்றவர் கள். எனவே, இவர்களை பதவி  இறக்கம் செய்தது சட்ட விரோதம் என தீர்ப்பு அளித்ததோடு, பதவி இறக்கம் செய்த உத்தரவையும் ரத்து செய்தனர். இதனால், 20க்கும் மேற்பட்ட சாலை ஆய்வா ளர்கள் மீண்டும் தங்களது வழக்க மான பணியைத் தொடர்ந்தனர். இதுகுறித்து தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை திறன்மிகு உதவியாளர்கள் சங்  கத்தின் மாநில பொதுச் செயலா ளர் சி.குருசாமி மற்றும் கௌரவ  பொதுச் செயலாளர் மு.மாரிமுத்து விடுத்துள்ள அறிக்கையில் கூறி யதாவது: இந்த நீதிமன்றத் தீர்ப்பை சாலை ஆய்வாளர்களுக்கு கிடைத்த வெற்றியாக கருதுகி றோம். எங்களது சங்கத்தின் இடை விடாத போராட்டத்தினால் இந்த வெற்றி கிடைத்துள்ளது. மேலும், சங்கத்தின் சார்பில் நீதிமன்றத்தில் திறம்பட வாதாடிய வழக்கறிஞர் பிரபுராஜதுரை மற்றும் வாஞ்சி நாதன் ஆகியோருக்கு பாராட்டுக் களையும் வாழ்த்துக்களையும் சங்கத்தின சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம். இனியாவது நெடுஞ்சாலைத்துறை முதன்மை இயக்குநர் அனைத்து கோட்டப் பொறியாளர்களுக்கும் தெளிவுரை யை சட்ட விதிமுறைகளின்படி வழங்க வேண்டும் என வலியுறுத்து கிறோம். இவ்வாறு அதில் தெரிவித் துள்ளனர்.