ஒன்றிய அரசின் மக்கள் விரோத பட்ஜெட்டைக் கண்டித்து மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கோரிப்பாளையத்தில் பிரச்சாரம் நடைபெற்றது. பிரச்சாரத்தில் பகுதிக்குழு உறுப்பினர் ஏ.பாவல் சிந்தன், மாநிலக்குழு உறுப்பினர் இரா. விஜயராஜன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் ஜா.நரசிம்மன், இரா.லெனின், மாமன்ற உறுப்பினர் டி.குமரவேல், பா.பழனியம்மாள், பகுதிச் செயலாளர் கோட்டைசாமி, கார்த்திக் ஆகியோர் பேசினர்.