மதுரை, மார்ச் 24- 7-ஆவது சீர்மிகு நகரத்திட்டம் இந்தியா 2022 மற்றும் 29 வது ஒன்றிணைதல் இந் தியா 2022 எக்ஸ்போ மார்ச் 23 முதல் 25 வரை புதுதில்லியில் நடைபெற்று வருகிறது. இக்கண்காட்சியில் மதுரை மாநக ராட்சியின் சார்பில் மேயர் வ.இந்திராணி, துணை மேயர் தி.நாகராஜன், நகரப்பொறி யாளர் அரசு ஆகியோர் கலந்து கொண்ட னர். கண்காட்சியில் சீர்மிகு நகரத் திட்டங் களை ஒவ்வொரு மாவட்டத்திற்கும் நக ரத்தின் வளர்ச்சிக்கும், எளிமையான முறை யில் பணிகளை மேற்கொள்வதற்கும் அவற்றை சிறப்பாக செயல்படுத்துவதற்கும் இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு பன் னாட்டு நிறுவனங்கள் தங்களது தயா ரிப்புக்களை காட்சிப்படுத்தி வைத்திருந்த னர். காட்சிப்படுத்தி வைக்கப்பட்டுள்ள நவீன இயந்திரங்கள், செயல்பாடுகள் குறித்து மேயர், துணை மேயர், நகரப்பொறி யாளர், உதவிசெயற் பொறியாளர் ஆகி யோர் பார்வையிட்டு மதுரை மாநகரின் வளர்ச்சிக்கு தேவையான இயந்திரங்கள் குறித்தும், தொழில்நுட்பம் குறித்தும் நிறு வனத்தாரிடம் கேட்டறிந்தனர்.