திருச்சிராப்பள்ளி, மார்ச் 26- மோடி அரசு மக்கள் மீது தொடுத்துவரும் பொருளா தார தாக்குதக் கண்டித்தும், எதிர்க்கட்சித் தலைவர்களின் குரல்வளையை நெறிக்கும் அடக்குமுறை மற்றும் அத்து மீறலைக் கண்டித்தும் சிஐடியூ, தமிழ்நாடு விவசாயி கள் சங்கம் மற்றும் அகில இந்திய விவசாய தொழிலாளர் கள் சங்கம் சார்பில் திருச்சிராப்பள்ளி மாவட்டம் திரு வெறும்பூர் ஒன்றியத்தில் பிரச்சாரம் நடைபெற்றது. பிரச்சாரத்தில் அகில இந்திய விவசாயத் தொழிலா ளர்கள் சங்க மாநிலப் பொருளாளர் அ.பழநிசாமி, மாவட் டத் துணைத் தலைவர் எஸ்.தெய்வநிதி, ஒன்றியத் தலை வர் பெரியசாமி, ஒன்றிய பொருளாளர் மகாலிங்கம், ஒன்றிய துணைச் செயலாளர் ராமமூர்த்தி, தமிழ்நாடு விவ சாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் ஆர்.நடராஜன், ஒன்றியத் தலைவர் கணேசன், ஒன்றியச் செயலாளர் குரு நாதன், சிஐடியு துணைத் தலைவர் அருணன், பிஎச்ஈஎல் பொதுச்செயலாளர் ஆர்,பரமசிவம், டி.குமரவேல், ஆர். செந்தில், எம்,இளையராஜா, பி.மகேந்திரன், கருணா நிதி ஆகியோர் பங்கேற்றனர்.