தமிழக முதல்வருக்கு சிபிஎம் வேண்டுகோள்
திண்டுக்கல், ஆக.5- 58 கிராமக் காவல்வாய் தொட்டி பாலம் அருகே தொழிற்சாலைகளுக்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்த செய்ய தமிழக முதல்வர் முன்வரவேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக்கொண்டுள்ளது. இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் திண்டுக்கல் மாவட் டச்செயலாளர் ஆர்.சச்சிதானந்தம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது: திண்டுக்கல் மாவட்டம் நிலக் கோட்டை, வத்தலகுண்டு, மதுரை மாவட்டத்தில் உசிலம்பட்டி, தேனி மாவட்டத்தில் ஆண்டிப்பட்டி, உள் ளிட்ட 58 கிராமங்களில் விவசாய நிலங் கள் பொய்த்துப்போனது. இப்பகுதி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லாத நிலை இருந்தது. குடிக்க தண்ணீர் கூட இப்பகுதி கிராமங்களில் இல்லை என்ற நிலை இருந்தது. 1986 ஆம் ஆண்டு முதல் இந்த திட்டத்தை நிறைவேற்றக் கோரி விவசாய சங்கங் கள், அரசியல் கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சாலை மறியல் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை நடத்தியிருக்கிறார்கள். 1996 ஆம் ஆண்டு வத்தலகுண்டு. ஆண்டிபட்டி, உசிலம்பட்டி, உள்ளிட்ட 58 கிராம பாசனத்திற்காக வைகை அணையிலிருந்து உபரி நீராக வெளி யேறும் தண்ணீரை கொண்டு வர திட்டம் தீட்டப்பட்டது. இந்த திட்டத்திற்கு 58 ஆம் கிராமக் கால்வாய்த் திட்டம் என்று பெயரிடப்பட்டது. இந்த திட்டத்திற்கு 1999 ஆம் ஆண்டு 33 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு திட்டப்பணிகள் தொடங்கப்பட்டன. நிதி பற்றாக்குறை காரணமாக மீண்டும் ரூ.86 கோடி ஒதுக் கப்பட்டு 18 ஆண்டுகள் பணிகள் நிறைவு பெறாமல் இழுத்தடிக்கப்பட்டு நிறை வேற்றப்பட்டது. இந்த திட்டம். பிரதான கால்வாய் 27 கி.மீ தூரத்திற்கும், இடது கிளைக் கால்வாய் 11.கி.மீ தூரத்திற் கும், வலது கிளைக் கால்வாய் 10 கி.மீ தூரத்திற்கும் அமைக்கப்பட்டது. 6 மீட்டர் முதல் 18 மீட்டர் உயரம் வரை 230 பிரம்மாண்டமான தூண்களுடன் தொட்டி பாலம் அமைக்கப்பட்டு அதில் பாசனத்திற்காக தண்ணீர் எடுத்துச்செல் லப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் திண்டுக்கல் மாவட்டத்தில் 2300 ஏக்கர் பாசன நிலங் கள் பயன் பெறும். திண்டுக்கல் மாவட் டம் நிலக்கோட்டை வட்டத்தில் ரெங் கப்பநாயக்கன்பட்டி கண்மாய், சந்தை யூர் கண்மாய், வெங்கடசமுத்திரம் கண் மாய், மானாவாரிகுளம் ஆகிய கண் மாய் பாசன குளங்களின் விவசாயி கள் பயன்பெறுவார்கள். போராட்டங்க ளால் பெறப்பட்ட இந்த தொட்டி பாலம் விருவீடு ஊராட்சி பகுதியில் மாயக் குரும்பன்பட்டியில் பாலத்திற்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் சில ஆபத்தான தொழிற்சாலைகளுக்கு அரசு அனுமதி அளித்துள்ளது.
விருவீடு ஊராட்சி மாயக்குரும் பன்பட்டியில் இந்த தொட்டி பாலம் சுமார் ஒன்றரைக் கிலோ மீட்டர் தூரம் உள்ளது. அநேகமாக தமிழ்நாட்டில் இந்த பகுதியில் தான் இப்படி தொட்டி பாலம் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு உலக அதிசயத்தைப் போல பிரம் மாண்டமான கட்டமைப்பு மூலம் தண்ணீர் எடுத்துச்செல்லும் இந்த பாலத்தை பாதுகாப்பது நமது கடமை. ஆனால் இந்த தொட்டி பாலத்தின் ஒரு புறம் கல்குவாரியும், இன்னொரு புறம் கிரசரும், அருகில் ஒரு தனியார் பட்டாசு தொழிற்சாலையும் அமைந்துள்ளன. இதனால் இந்த தொட்டி பாலம் சேதம டைய அதிகமான வாய்ப்புகள் உள்ள தாக இப்பகுதி விவசாயிகள் அச்சப்படு கிறார்கள். நெடுநாட்களுக்கு பிறகு இந்த தொட்டி பாலத்தில் கடந்த ஆண்டு தான் தண்ணீர் வந்தது. இதனால் விவ சாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். அந்த தண்ணீரை பயன்படுத்தி வருகிறார் கள். இந்த தொட்டி பாலம் அருகே அரசு விதிமுறைகளை மீறி தொழிற்சாலை கள் அமைக்கப்பட்டுள்ளதால் இப்பகுதி விவசாயம் கடுமையாக பாதிப்படை யும். தொழிற்சாலைகளின் அனுமதியை தமிழ்நாடு முதல்வரும் திண்டுக்கல் மாவட்ட நிர்வாகமும் ரத்து செய்ய முன் வர வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார். இந்த தொட்டி பாலத்தை கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர்கள் பி. ஆஸாத், கே.டி.கலைச்செல்வன், வத்தலகுண்டு ஒன்றியச்செயலாளர் தெய்வேந்திரன், உள்ளிட்டோர் பார்வையிட்டனர். (நநி)