சென்னை,ஜூன் 30- அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இரு வருக்கும் இடையேயான மோதல் உச்சக்கட்டத்தை எட்டி உள்ளது. இந்த நிலையில் இருவரும் கையெழுத்திட்ட படிவம் வழங்கப்படாததால் 9 ஆம் தேதி நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தலில் அதிமுகவினர் இரட்டை இலை சின்னத்தில் போட்டி யிட முடியாத நிலை ஏற்பட்டுள் ளது. மாவட்ட கவுன்சிலர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள் உள்ளிட்ட 34 பதவிகளுக்கு கட்சி சார்பில் போட்டியிடுபவர்களுக்கு அவர் களது சின்னங்கள் ஒதுக்கப்படும். அந்த வகையில் அதிமுக சார்பில் இந்த பதவிகளுக்காக போட்டி யிடும் நிர்வாகிகளுக்கு பார்ம் ‘ஏ’ மற்றும் பார்ம் ‘பி’ யில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் கையெழுத்து போட வேண்டும். தற்போது அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் தொடர்பான மோதல் உச்சக்கட்டத்தை எட்டி யுள்ள நிலையில் இருவரும் கையெழுத்திட்ட படிவங்கள் அதிமுகவினருக்கு வழங்கப்பட வில்லை. இதனால் அவர்கள் சுயேச்சையாக போட்டியிடு கிறார்கள். இதன் காரணமாக அதி முகவினர் கலக்கம் அடைந்துள்ள னர். சுயேட்சையாக போட்டியிடு வதால் அதிமுகவினர் பெரும் கலக்கத்தில் உள்ளனர்.