அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு மதுரை, ஏப்.26- மதுரை சித்திரைப் பெருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்து இந்து சமயம் -றநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ,வணிகவரி-பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி ஆகியோர் ஏப்ரல் 26 அன்று மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில், வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளும் இடம் ஆகி யவற்றில் நேரடியாக ஆய்வு மேற்கொண்டனர். அதன்பின்பு அமைச்சர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் மதுரை சித்திரைப் பெருவிழா தொடர்பான பாதுகாப்பு முன் னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத் துத்துறை அலுவலர்ளுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தொடர்ந்து, அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு செய்தியாளர்களிடம் தெரிவித்த தாவது: வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளும் நிகழ்வின் போது கூட்ட நெரிசலை தவிர்த்திடும் வித மாக தமுக்கம் மைதானம், அருகேயுள்ள பூங்கா, கல்லூரி மற்றும் பொழுதுபோக்கு இடங்களை இரவில் திறந்துவைக்க உத்தரவிட்டுள்ளோம். பாராம்பரிய முறைப்படி மாட்டு வண்டிகளில் வரும் பக்தர்களுக்கு அனுமதி, மாட்டுவண்டிகளை நிறுத்த வழிவகை செய்யப்படும்.
வரலாற்றில் இதுவரை இல்லாத அள விற்கு மதுரை சித்திரைப் பெருவிழாவை சீரோடும், சிறப்போடும் சிறப்பாக நடத்த ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளது. திருப்பரங்குன்றத்தில் விரைவில் ரோப்கார் மேலும், தமிழ்நாட்டின் 1058 திருக்கோவில் களில் 1416 திருக்குளங்களை பராமரித்து வருகிறோம், இப்போதுவரை 87 குளங்களை மராமத்து பணிகளை செய்துள்ளோம், கோவில் திருக்குளங்களில் கழிவு நீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். பழனி, திருப்பரங்குன்றம், திருநீர்மலை, திருக்கழுக் குன்றம் ஆகிய 4 கோவில்களுக்கு விரைவில் ரோப் கார் ஏற்பாடு செய்யப்படும் பணிகள் நடைபெறு கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்த கூட்டத்தில், இந்து சமய அறநிலை யத்துறை ஆணையாளர் க.வி.முரளிதரன், மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர், மாநகர காவல் ஆணையாளர் நரேந்திரன் நாயர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆர்.சிவபிரசாத்,மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த் , மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் மதுரை துணை மேயர் தி.நாகராஜன் உட்பட அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.