districts

img

பிஎஸ்என்எல்- சன்சாரர் நிகாம் ஓய்வூதியர்கள் தர்ணா

மதுரை, ஜூலை 31-  அகில இந்திய பிஎஸ் என்எல்-டிஓடி ஓய்வூதியர்-சன்சார் நிகாம் ஓய்வூதியர் திங்களன்று மதுரை தல்லா குளம் பிஎஸ்என்எல் அலுவ லகத்தில் தர்ணாவில் ஈடு பட்டனர். பதினைந்து சதவீதம் ஊதிய நிர்ணய உயர்வுடன் கூடிய பென்சனை 2017-ஆம்  ஆண்டு முதல் வழங்க வேண்  டும். பென்ஷன் மாற்றத்தை சம்பளம் மாற்றத்திலிருந்து பிரித்துக் கொடுக்கக் கால தாமதம் செய்வதைத் தவிர்க்க  வேண்டும். டிஓடி அதிகா ரத்தளத்தைக் களைய வேண்டும். முடக்கப்பட்ட ஐடிஏ வை மீண்டும் வழங்க வேண்டும் என வலியுறுத்தி மதுரையில் திங்களன்று பிஎஸ்என்எல்- சன்சாரர் நிகாம் ஓய்வூதியர்கள் மது ரையில் தர்ணாவில் ஈடுபட்ட னர். ஏஐபிடிபிஏ சங்க மாவட்  டத் தலைவர் என்.உத்திர குமார் தலைமையில் நடை பெற்ற தர்ணாவில் மாநில உதவிச் செயலாளர் எஸ்.ஜான் போர்ஜியோ. எஸ்.கணேசன், பிஎஸ்என்எல் ஓய்வூதியர் சங்க மாவட்டச்  செயலாளர் சி.செல்வின் சத்யராஜ், மாநில அமைப்புச்  செயலாளர் ஜி.சுந்தரராஜன், மாநில சிறப்பு அழைப்பாளர் எம்.செல்வராஜன், மாவட்  டப் பொருளாளர் ஆர்.சண்  முகவேல், தொலைத் தொடர்பு ஒப்பந்த ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் எம்.சித்திரைமணி ஆகி யோர் தர்ணாவின் நோக்கம் குறித்துப பேசினர். அகில  இந்திய காப்பீட்டுக் கழக ஊழியர் சங்க மதுரை மண்ட லத் தலைவர் என்.சுரேஷ்  குமார் உள்ளிட்ட தோழமைச் சங்க நிர்வாகிகள் வாழ்த்திப் பேசினர்.

விருதுநகர்

விருதுநகரில் பொது  மேலாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்  டத்திற்கு மாவட்டத் தலை வர் ஜி.செல்வராஜ் தலைமை  வகித்தார். சி.பொன்ராஜ், எம். முத்துச்சாமி, மாவட்டச் செய லாளர் கே.புளுகாண்டி, மாநி லப் பொருளாளர் பி. கோவிந்தராஜன், மாநில உத வித் தலைவர் எம்.பெருமாள்  சாமி, எஸ்.என்.பி.டபுள்யு.ஏ. மாநில உதவிச் செயலாளர் மனோகரன், பி.எஸ்.என்.எல்.இ.யு மாவட்டச் செயலாளர் ஏ.குருசாமி, டி.என்.ஜி.பி.ஏ மாவட்டச் செயலாளர் ஜெகதீசன், சிஐ டியு மாவட்டத் தலைவர் எம். மகாலட்சுமி, எல்.சங்கையா,  மாரிக்கனி உட்பட பலர் பங்கேற்றனர்.

தேனி

தேனியில் நடைபெற்ற தர்ணாவிற்கு சங்கத்தின் மாவட்ட உதவிச் செயலாளர்  என்.முத்துரத்தினம் தலைமை வகித்தார். பென்ஷனர் நல சங்க மாநில அமைப்புச் செயலாளர் எஸ்.பாலசுப்பிரமணி, மூத்த  உறுப்பினர் பி.பால கிருஷ்ணன், பிஎஸ்என்எல் ஊழியர் சங்க கிளைச் செய லாளர் வி.செந்தில்குமார், பென்ஷனர் நலச் சங்க செய லாளர் எம்.நாராயணன், சிஐ டியு தேனி மாவட்டக்குழு உறுப்பினர் டி.கே.ஸ்ரீனி வாசன் உட்பட ஏராளமா னோர் பங்கேற்றனர். தர்ணா வில் சங்கத்தின் அகில இந்திய துணைத் தலைவர் மோகன்தாஸ் எழுதிய “என்  வாழ்க்கையும், போராட் டங்களும்” என்ற நூல் வெளி யிடப்பட்டது.