தூத்துக்குடி, ஜன. 12 உலர் சாம்பல் செங்கல் தயாரிப்பு தொழிலுக்கான ஜிஎஸ்டி வரியை அதிகரிக்கும் முடிவை கைவிட வேண்டும் என தென்மாவட்ட உலர் சாம்பல் செங்கல் தயாரிப்பாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள் ளனர். தூத்துக்குடியில் தமிழ்நாடு உலர் சாம்பல் செங்கல் தயாரிப் பாளர்கள் சங்கத்தின் ஆலோச ணை கூட்டம் நடந்தது. கூட்டத்தி ற்கு சங்கத்தின் மாநில தலைவர் ரவி தலைமை வகித்து பேசினார். செயலாளர் சசிதர், பொருளாளர் அருள்ராஜா ஆகியோர் முன்னி லை வகித்து பேசினர். கூட்டத்தில் உலர் சாம்பல் செங்கல் தயாரிப்பு தொழிலுக்கு தற்போது 5 சதவீத ஜி.எஸ்.டி வரி விதிக்கப்படுகிறது. இந்த வரியை மத்திய அரசு 12சதவீத மாக அதிகரிக்கும் முடிவை கைவிட வேண்டும். மாவட்டம் தோறும் உலர் சாம்பலுக்கான விலையை மாவட்ட நிர்வாகி கள் மூலம் நிர்ணயம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. தொடர்ந்து தமிழ்நாடு உலர் சாம்பல் செங்கல் தயாரிப்பாளர் கள் சங்க செயலாளர் சசிதர் அளித்த பேட்டியில், தமிழகத்தில் உலர் சாம்பல் மூலம் செங்கல் தயாரிக்கும் சிறு தொழில் நிறுவனங்கள் 1000க்கும் மேற்பட்டவை செயல்பட்டு வரு கின்றன. இந்த நிறுவனங்களு க்கு தேவையான மூலப்பொரு ளான உலர் சாம்பல் அனல் மின்நிலையங்களில் இருந்து பெறப்படுகிறது. தமிழகத்தில் உள்ள உலர் சாம்பலில் 40 முதல் 45 சதவீதம் வரை தமிழக நிறுவ னங்களுக்கு தேவைப்படுகிறது. தற்போது இந்த நிறுவனங்க ளுக்கு 20 சதவீதம் உலர் சாம்பல் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை வெளியிட்டுள்ள உத்தரவில், 20 சதவீதம் உலர் சாம்பலை இலவசமாக கொடுக்க வேண்டும் என்பது குறித்து தெரி விக்கப்படவில்லை. அதனை சேர்த்து அரசாணை வெளியிட வலியுறுத்த திட்டமிட்டுள்ளோம். இந்த கோரிக்கை நிறை வேற்றப்படாத பட்சத்தில் சட்டப் போராட்டம் நடத்தவும் திட்ட மிடப்பட்டுள்ளது. உலர் சாம்பல் செங்கல் தயாரிப்பு தொழிலுக்கு தற்போது விதிக்கப்பட்டுள்ள 5 சதவீத ஜி.எஸ்.டி வரியை 12 சதவீதம் ஆக உயர்த்துவதற்கு கவுன்சில் முடிவு செய்து இருப்ப தாக தெரிகிறது. அந்த முடிவை கைவிட வேண்டும் என்றார். கூட்டத்தில் மண்டல தலைவர் கண்ணன், செயலாளர் அரவிந்த், பொருளாளர் முருகன், மேட்டூர் மண்டல செயலாளர் தனபாலன் உள்பட பலர் கலந்து கொண்ட னர்.